தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் 10ஆவது மாநில மாநாடு 1
00 பேர் கொண்ட வரவேற்பு குழு அமைப்பு
பெரம்பலூர், ஜுன் 29- பெரம்பலூரில் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் 10 ஆவது மாநில மாநாடு செப்டம்பர் மாதம் 20, 21 தேதிகளில் நடைபெறுகிறது. மாநாட்டை வெற்றிகரமாகவும், எழுச்சியாகவும் நடத்த வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் சனிக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் அகஸ்டின் தலைமையில் நடைபெற்றது. இதில், ஆட்டோ சம்மேளன தலைவர் வி.குமார், செயல் தலைவர் எஸ். பாலசுப்பிரமணியம், பொதுச் செயலாளர் எம்.சிவாஜி, பொருளா ளர் உமாபதி, பெரம்பலூர் மாவட்ட ஆட்டோ சங்கத் தலைவர் கிருஷ்ண குமார், செயலாளர் ரங்கநாதன், பொரு ளாளர் சிவசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வரவேற்புக் குழு தலைவராக அகஸ்டின், செயலாளராக ரங்கநாதன், பொருளாளராக கருணா நிதி உள்ளிட்ட நூறு பேர் கொண்ட வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. மாநாட்டு இலச்சினை (லோகோ) பலத்த கர ஒலிக்கிடையே வெளியிடப் பட்டது. வரவேற்பு குழு அமைப்பு கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி. ரமேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டு செலவுக்கு நிதி யும், உணவு பொருட்கள் வழங்குவ தாக சங்கங்கள் உறுதி அளித்தன.