வைக்கம் கடற்கரையில் தந்தை பெரியார் நினைவகம் மற்றும் பெரியார் நூலகம் திறப்பு விழாவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தலைமை வகித்தார். அவரது உரை:
நடப்பதற்கான உரிமை இயல்பாக இந்த பகுதியில் உள்ளவர்களுக்குதான் மறுக்கப்பட்டிருந்தது. அதாவது மலையாளி களுக்கு. ஆனால் அந்த பிரச்சனையை வெறும் மலையாளிகள் அல்லது திருவிதாங்கூரின் பிரச்சனையாக பெரியாரும் இதர போராட்டத் தலைவர்களும் பார்க்கவில்லை. நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் பிரச்சனையாக அவர்கள் பார்த்தனர். அதனால்தான் சீக்கி யர்கள் உட்பட தேசிய தலைவர்கள் அப்போராட்டத்தில் இணைந்தனர். அந்த அளவுக்கு எல்லை கடந்த ஆதரவையும் ஒத்து ழைப்பையும் வைக்கம் சத்தியாக்கிரகத்தில் நம்மால் பார்க்க முடிந்தது. அந்த ஆதரவையும் பரஸ்பர ஒத்துழைப்பையும் தமிழ்நாடும் கேரள மும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கின்றன. ஒத்துழைப்பு என்பது வார்த்தைகளில் அல்ல, செயலில் வெளிப்படுகிறது. பொருளா தார சுயாட்சி உள்ளிட்ட மாநிலங்களின் உரிமை கள் மீது தொடர்ந்து அத்துமீறல் நடந்து வரும் இந்த சூழ்நிலையில் மேலும் பல மாநிலங் களுக்கு இடையே இந்த ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டும். வைக்கம் சத்தியாக்கிர கத்தில் எல்லை கடந்த சகவாழ்வையும் ஒத்து ழைப்பையும் பார்த்தோம். கேரளாவும் தமிழக மும் அந்த சகவாழ்வையும் ஒத்துழைப்பையும் தொடர்கின்றன. பொருளாதார நலன்களின் மீது நிரந்தர அத்துமீறல்கள் நடைபெற்று வருகின்றன. தனிமனிதர்களின் சுயமரி யாதைக்காக பெரியார் குரல் கொடுத்தார். இன்று மாநிலங்கள் தங்கள் சுயமரியாதைக் காக எழுந்து நிற்க வேண்டும் என்று காலம் கோருகிறது. காலம் கோரும் ஒத்துழைப்பை கேரளாவும் தமிழகமும் முன்னெடுத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.
நாகம்மாளின் தலைமை
அதே ஒத்துழைப்பு மனப்பான்மை பெரியார் நினைவிடத்தைப் புதுப்பிப்பதிலும் காணலாம். வரும் காலங்களில் இரு மாநிலங்களும் அதை மேலும் வலுப்படுத்தவேண்டும். பெரியார் என்கிற ஈ.வெ.ராமசாமி நாயக்கர், இந்தியா முழுவதும் உள்ள சமூக சீர்திருத்தவாதிகளில் முன்னணியில் இருப்பவர். 1924 ஏப்ரல் 13, அன்று வைக்கம் சத்தியாக்கிரகத்திற்கு பெரியார் தலைமை ஏற்றார். வைக்கத்தில் மக்கள் கடல் போல் திரண்டனர். திருவிதாங்கூர் நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில், அவர் கைது செய்யப்பட்டு ஆறுக்குற்றி சிறையில் அடைக்கப்பட்டார். தகவல் அறிந்ததும் அவரது மனைவி நாகம்மாள் வைக்கம் வந்தார். பெண்கள் பங்கேற்புடன் சத்தியாக்கிரகத்தின் முக்கியத்துவம் குறித்து பிரச்சாரம் செய்தார். பெண்களின் திருமண வயதை உயர்த்தவும், அவர்கள் தங்கள் கணவரைத் தேர்வு செய்யவும் விவாகரத்து செய்யவும் உரிமை பெற்றதில் பெரியாரின் தலையீடுகள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை. பெரியாரின் இது போன்ற அனைத்து ஈடுபாடுகளிலும் நாகம்மா வும் சமமான பங்கேற்பாளராக இருந்தார். ஆறுக்குற்றி சிறையில் இருந்து வெளியே வந்த பெரியார் மீண்டும் சத்தியாகிரகத்தில் ஈடு பட்டதால், அவரை நாடு கடத்த அரசு உத்தர விட்டது. பெரியார் உத்தரவை மீறியதால், திரு விதாங்கூர் நிர்வாகம் அவரை மீண்டும் சிறை யில் அடைத்தது. மன்னர் இறந்த சந்தர்ப்பத்தில் பெரியாரும் பிற சத்தியாக்கிரகிகளும் விடு விக்கப்பட்டனர். இவ்வாறு வைக்கம் சத்தியாக் கிரகத்திற்கு தன்னலமற்ற தலைமையை பெரியார் வழங்கினார். மிகுந்த மகிழ்ச்சியோடு நாமெல்லாம் புன ரமைக்கப்பட்ட பெரியாரின் நினைவிட திறப்பு விழாவில் பங்கேற்றிருக்கிறோம். இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றி ருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. அவரது பங்கேற்பு இந்த விழாவை மேலும் சிறப்பித் துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள சமூக சிந்தனையாளர்களில் பெரியார் என்கிற ஈ.வெ.ராமசாமி முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளார். ஸ்ரீ நாராயணனை கேரள மக்கள் அனைவரும் குரு என்று அழைப்பது போல, ஈ.வெ.ரா.வை தமிழர்கள் அனைவரும் பெரியார் என்று மரியாதையுடன் அழைக்கிறார் கள். பெரியார் விடுதலைப் போராட்ட வீரராக விளங்கினார். காந்திய சிந்தனைகளை தூக்கிப்பிடித்து தேசிய இயக்கத்தின் பகுதியாக இருந்தபோதே காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். பெரியாரும் கம்யூனிஸ்ட்டுகளும்
முற்போக்கு எண்ணங்கொண்ட பலரும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை உருவாக்கி யதும். பின்னர் அதில் சிலர் கம்யூனிஸ்ட் கட்சி யை உருவாக்கியதும் நாமெல்லாம் அறிந்தவை. பெரியாரின் அனுபவத்திலும் இது மாறுபட்டிருக்கவில்லை. காங்கிரஸ் கட்சி யினர் பலரும் முற்போக்கு சிந்தனையை அல்ல, பிற்போக்கான சிந்தனைகளைக் கொண்டிருந்ததாக பெரியார் கருதினார். இப்படி யாக பெரியார் தொழிலாளர் அமைப்புடனும் கம்யூனிஸ்ட் இயக்கத்துடனும் இணைந்து நின்றார். நாகப்பட்டினத்தில் ரயில்வே தொழி லாளர்களுக்கு ஆதரவளித்ததற்காக பெரியார் கைது செய்யப்பட்டார். பெரியார் தனது சமூக சீர்திருத்த நடவடிக்கை களுக்கு கம்யூனிஸ்ட் கட்சியை துணையாக்கிக் கொண்டார். தொடக்க கால கம்யூனிஸ்ட்டுகளு டன் உற்ற நட்பை ஏற்படுத்திக் கொண்டார். குறிப்பாக தோழர்கள் எம்.சிங்காரவேலுவும், பி. ஜீவானந்தமும் அவருடன் நட்பில் இருந்தனர். 1920 க்குப்பிறகு அவர் இடதுசாரி கருத்துகளு டன் இணைந்து செயல்பட்டார். 1952 இல் தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைத்த சிறப்பான வெற்றிக்கு பெரியாரின் செல்வாக்கு உதவியது. அதன்படி அன்று தோழர் பி.ராம மூர்த்தி எதிர்க்கட்சி தலைவரானார். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானபோது அதன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் ஒன்பது பேரில் ஒருவரானார். அவரது சீர்திருத்த திருமணத்திற்கு தலைமை வகித்தவர் பெரியார். அந்த அளவுக்கு பெரி யாரும் தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தலை வர்களும் நெருக்கமாக இருந்தனர். சமூக சீர்திருத்தவாதியாக இருந்தார் பெரி யார் என்பது நாமெல்லாம் அறிந்ததே. அதன்படி சமூக நீதியையும் சுயமரியாதையை யும் உயர்த்திப் பிடித்தார். குடியரசு என்கிற பத்திரிகையை தொடங்கினார். அதில் தோழர் சிங்காரவேலு தொடர்ந்து எழுதி வந்தார். கம்யூ னிஸ்ட் கட்சி அறிக்கை குறித்து 1931 அக்டோபர் 4 ஆம் தேதி ஒரு தலையங்கம் பிரசுரமானது. அதில் கூறப்பட்டிருந்ததை குறிப்பிடுகிறேன். சோசலிசம் முதன்முதலில் செயல்படுத்தப்பட் டது ரஷ்யாவில், காரணம் உலகத்தில் மிகவும் சர்வாதிகாரியாக இருந்தார் ஜார் மன்னன். அந்த அடிப்படையில் ரஷ்யாவில் அல்ல இந்தியாவில்தான் சோசலிசம் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், அதை தடுக்க இந்தியாவில் ஏராளமான சதித்திட்டங்கள் நடந்தன. கடவுளின் பெயராலும் மதத்தின் பெய ராலும் இந்திய மக்களுக்கு அறிவும், கல்வியும் உலகளாவிய அறிவும், சுயமரியாதையும் பெற முடியாமல் செய்தனர். அப்படியே அவர்களை பழமை மாறாமல் பாதுகாக்க சதித்திட்டக்காரர் கள் சிறப்பு கவனம் செலுத்தினார்கள், என்று பெரியார் எழுதினார்.
சோசலிச ஈர்ப்பு
இந்த தலையங்கம் வெளியான பிறகு, தோழர் பி.ஜீவானந்தம் மொழியாக்கம் செய்த கம்யூனிஸ்ட் அறிக்கை பல அத்தி யாயங்களாக வெளியானதும் குடியரசில்தான். அதற்கு அடுத்த ஆண்டு 1932 இல் பெரியார் சோவியத் யூனியன் சென்றார். அங்கு 3 மாதங்கள் தங்கியிருந்தார். சோவியத் யூனியன் மீது பெரும் மரியாதை கொண்டிருந்தார் பெரி யார். பின்னர் 40 ஆண்டுகளுக்கு பிறகு 1972 இல் சோவியத் யூனியனில் சோசலிசத்தின் வெற்றிகளை குறிப்பிட்டு திராவிடர் கழகத்தின் வெளியீடான உண்மையில் பெரியார் எழுதி னார். அதில், சோசலிச நாட்டில் எந்த ஒரு மனிதரையும் உயர்ந்தவராகவோ தாழ்ந்தவ ராகவோ கருதுவதில்லை என்று குறிப்பிட்டார். சமவாய்ப்பை அவ்வளவு தெளிவாக குறிப்பிட்ட பெரியார் அனைவருக்கும் நடமாடும் உரிமை தேவை என சிந்தித்ததும் போராடியதும் இயல்பானது. அதைத்தான் 1924 இல் வைக்கத்தில் நாம் பார்த்தோம். வர்ணாசிரம தர்மத்தின் பார்வையில், சமூகத்தில் பல்வேறு பிரிவுகள் இருந்தன. சாதியால், பாலினத்தால் வேறுபாடு களும் பாகுபாடுகளும் அதில் உள்ளார்ந்திருந் தன. அதனால்தான் யாரெல்லாம் வழிபாட்டுத் தலங்களில் நுழையலாம் எனவும், யாருக் கெல்லாம் நடைபாதையில் செல்ல சுதந்திரம் உள்ளது எனவும் வரையறுக்கப்பட்டிருந்தது. அத்தகைய வரையறைகளுக்கு எதிரான போராட்டமாகவே வைக்கம் சத்தியாக்கிரகத்தை பார்க்கலாம்.
மையக்கருத்தாக சமூகநீதி
கருத்தியல், சட்டம், தர்மம் என அனைத்தும் காலத்துக்கேற்ப நவீனமாக்கப்பட வேண்டும் என்கிற பார்வை பெரியாரிடம் இருந்தது. இன்றைய தர்மம் நாளைய அதர்மமாக இருக்கும் என பெரியார் குடியரசில் எழுதி யுள்ளார். அதன்படி பெரியார் முன்வைத்த கருத்து சமதர்மம் என்பதாகும். தர்மத்தை காலத்துக்கேற்ற நவீனப்படுத்தும் வழியாகவே பெரியார் சமதர்மம் என்கிற கருத்தை முன்வைத்தார். அதன்படி தன்மானமும் சுதந்திரமும் சமத்துவமும் சாதிபாகுபாடின்றி ஒவ்வொருவருக்கும் உரியதாகும். அதன் மையக் கருத்தாக சமூகநீதி இருந்தது. வைக்கம் மகாதேவர் கோயில் தெருக்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் நடப்பதற்கான உரிமை கோரிய போராட்டத்தில் பங்கேற்ற நாங்க ளெல்லாம் சிறையில் உள்ளோம். எனவே தாங்கள் உடனடியாக வைக்கத்துக்கு வந்து சத்தியாக்கிரகத்தை தலைமையேற்று வழி நடத்த வேண்டும் என்று பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப்பும் கேசவ மேனனும் பெரியாருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர். அப்படி 1924 ஏப்ரல் 13 இல் வைக்கம் போராட்டத்தின் தலைமையை பெரியார் ஏற்றுக்கொண்டார். - தொகுப்பு : சி.முருகேசன்