தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 4ஆவது மாநில மாநாட்டை ஒட்டி சென்னை வியாசர்பாடியில் புதனன்று (ஜன.4)”சாதி மறுப்பாளர்கள் சங்கமம்” நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேரள தேவசம் போர்டு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன், அய்யாவழி சமய தலைமை குரு பாலபிரஜாபதி அடிகளார், சிறப்பு தலைவர் பி.சம்பத், வி.சி.க. துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, கொளத்தூர் மணி (தந்தை பெரியார் திராவிடர் கழகம்), மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ், மாநில பொருளாளர் இ.மோகனா, லோகநாதன் (ஆதித்தமிழர் பேரவை), எம்.ஊர்காவலன் (தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு), கு.ஜக்கையன் (ஆதித்தமிழர் கட்சி), தீ.ஒ.மு. வட சென்னை மாவட்டச் செயலாளர் வி.ஜானகிராமன் ஆகியோர் பேசினர். முன்னதாக மாவட்டத் தலைவர் ராஜ்குமார் வரவேற்றார். எஸ்.பாக்கியலட்சுமி நன்றி கூறினார்.