சென்னை, ஜூன் 17- கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு எடுத்த பல்வேறு முன்னெடுப்பு களின் காரணமாக தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை, நந்தம்பாக்கத்தில் ரூ. 116 கோடியில் நிதிநுட்ப நகரம் அமைப்ப தற்கும், ரூ.254 கோடியில் சர்வதேச தரத்திலான நிதிநுட்ப கோபுரம் கட்டு வதற்கும் சனிக்கிழமையன்று (ஜூன் 17) முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து அவர் பேசு கையில்,“கடந்த இரண்டு ஆண்டு களாக அரசு எடுத்த பல்வேறு முன்னெடுப்புகளின் காரணமாக தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது. இந்தியாவுக்கே முன்மாதிரியான மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு வளர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, தொழில் துறையானது மிக வேகமான முன்னேற்றங்களை உருவாக்கித் தந்து வருகிறது”என்றார். தமிழ்நாடு அரசின் தொழில்துறை நிகழ்ச்சிகள் என்பவை நமது மாநிலத்தின் சமூக மற்றும் பொரு ளாதார வளர்ச்சிக்கு வித்திடும் நிகழ்ச்சி களாக அமைந்திருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
தொழில்துறையில், சாதனை மேல் சாதனைகளை நாம் செய்து வருகி றோம். முதலீடுகளை ஈர்ப்பதற்கு எடுத்து வைத்திடும் ஒவ்வொரு அடி யும், வேலைவாய்ப்புகளை உரு வாக்கிடும் ஒரு பெரிய லட்சியத்தி னைக் கொண்டதாக இருக்கின்றது என்றும் முதல்வர் தெரிவித்தார். நமது கடுமையான முயற்சி, உலகளாவிய நிறுவனங்களது கவனங்களை வெகுவாக ஈர்த்திருக் கிற காரணத்தால் தொழில் நிறுவ னங்கள் தங்கள் முதலீடுகளை மேற்கொள்ள தமிழ்நாட்டை நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றது எனவும் கூறினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள இளைஞர் களும், பெண்களும் அவர்க ளது வசிப்பிடத்திற்கு அருகிலேயே பணிபுரிய ஏதுவாக, பரவலாக, மாநிலம் முழுவதும் இம்முதலீடுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. நிதி நுட்பத்துறைக்கான மின்னணுமய மாக்கப்பட்ட நிதிச்சேவைகள் அனைத் தும் ஏழை எளிய மக்கள் அனைவரையும் சென்றடையவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தற்போதுள்ள சூழ்நிலையில், ஏடிஎம்-இல் பணம் எடுப்பதைவிட, கைபேசி மூலமாக பணப்பரிவர்த் தனை கள் மேற்கொள்வது அதிகமாக உள்ளது. வங்கிகள் ஏறக்குறைய முழு டிஜிட்டல் வங்கிகளாக மாறிவிட்டனவோ என்ற அளவிற்கு, தற்போது டிஜிட்டல் பணபரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன. முற்றிலுமாக எல்லா இடங்களுக் கும் எல்லாத் தரப்பினரையும் இது இன்னும் சென்றடையவில்லை என்று சொன்னாலும், எதிர்காலத்தைக் கருதி, அதற்கு ஏற்ப நமது திட்டமிடுதல்கள் இருக்கவேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ. அன்பர சன், செஞ்சி கே.எஸ்.மஸ்தான், டி.ஆர். பி. ராஜா, சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி,வர்த்தக துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிரு ஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.