கோவையில் தமிழ்த் தாய் சிலை
தாய்மொழி, தாய்நாடு என்று பெருமிதமாக சொல்லும் வண்ணம் கலைஞரின் தலைமையில், 2010 ஆம் ஆண்டு கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்றது. இந்த மாபெரும் விழா எந்நாளும் நினைவில் கொள்ளும் வகை யில் தமிழன்னைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் முகமாக கோவையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் தமிழ்த் தாய் சிலை நிறுவப்படும்.
தியாகிகள் மண்டபம் புனரமைப்பு
சென்னை, கிண்டி, காந்தி மண்டபம் வளாகத்தில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மண்டபம் மற்றும் தமிழ்மொழி தியாகிகள் மண்டபங்களில் ரூ.2.50 கோடி செலவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அந்த மண்டபங்களிலுள்ள தியாகிகள் புகைப்படங்கள் நவீன தொழில்நுட்பத்தில் எண்ம மயமாக்கப்படும்.
உலகத் தரத்தில் எம்ஜிஆர் திரைப்படப் பயிற்சி நிறுவனம்
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக் காட்சிப் பயிற்சி நிறுவனத்தினை உலகத் தரத்திற்கு இணை யாக உயர்த்திடவும், அங்குப் பயிலும் மாணவர்களுக்கு தரமான தொழில்நுட்பத் திறனை உயர்த்திடவும் எண்ணி, 6 பாடப் பிரிவுகளுக்கு முதற்கட்டமாக ரூ.10 கோடியில் அதி நவீன தொழில்நுட்ப கருவிகள் மற்றும் உபகரணங்கள் கொள் முதல் செய்யப்பட உள்ளன.
செய்தியாளர் அறைகளில் கணினி
அச்சு மற்றும் காட்சி ஊடகச் செய்தியாளர்கள் உடனுக் குடன் செய்திகளை விரைந்து அனுப்ப ஏதுவாக, அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள செய்தியாளர் அறைகளில், நவீன கட்டமைப்புடன் கூடிய கணினி மற்றும் அதிவேக இணையதள வசதிகள், ரூ.41 லட்சம் (தொடரும் மற்றும் தொடரா செலவினம்) மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
புரட்சிக்கவிஞர் அரங்கம்
“புரட்சிக் கவிஞர்” என்றும், “பாவேந்தர்” என்றும் அழைக்கப் பட்ட அவரது இலக்கியப் பணிகளைப் போற்றிப் பெருமைப் படுத்தும் விதமாக பாரதிதாசன் நினைவாக விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் நினைவு அரங்கம் அமைக்கப் படும்.
குமரிக் கோமேதகத்திற்கு சிலை
கன்னியாகுமரியை தமிழ்நாட்டுடன் இணைப்பதற்கான போராட்டத்தில் மார்ஷல் நேசமணியின் போர்ப்படைத் தளபதி யாக விளங்கியவர், திருவிதாங்கூர் கொச்சி சட்டப்பேர வைக்கு இருமுறையும், தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு மும் முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சுதந்திரப் போராட்டத் தியாகி குமரிக் கோமேதகம் ஆர்.பொன்னப்ப நாடார். இவர் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய வர். எளிமையாக வாழ்ந்து ஏழை மக்களின் குரலாக ஒலித்த குமரிக் கோமேதகம் ஆர்.பொன்னப்ப நாடார் நூற்றாண்டு நிறைவு பெறுவதையொட்டி, நாகர்கோவில் நகரில் ரூ.50 லட்சத்தில் சிலை நிறுவப்படும்.
உதவித்தொகை உயர்வு
தமிழறிஞர்கள், எல்லைக் காவலர்கள், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் உதவித் தொகை ரூ.4,500-லிருந்து 7,500 ஆக உயர்த்தப்படு கிறது. அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ரூ.3,500-லிருந்து 7,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். எல்லைக் காவலர் களுக்கு ரூ.5,500-லிருந்து ரூ.7,500 ஆக உயர்த்தி வழங்கப் படும்.
க.இரா.ஜமதக்னிக்கு நினைவுத் தூண்
இந்திய விடுதலைப் போராட்ட வீரர், மார்க்சிய சிந்த னையாளர், நூலாசிரியர், கவிஞர், பன்மொழிப் புலவர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல பரிமாணங்கள் கொண்டவர் க.இரா.ஜமதக்னி. சார்லஸ் டார்வின் எழுதிய நூல்களை ஆராய்ந்து ‘உயிர்களின் தோற்றம்’ என்று தமிழில் எழுதிய வர். காரல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் இவரால் மொழி யாக்கம் செய்யப்பட்டது. வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகில் கடப்பேரி என்னும் ஊரில் பிறந்தார். இளம் வயதிலேயே ஜம தக்னிக்கு இந்தியா விடுதலை பெற வேண்டும் என்பதில் ஆர்வம் ஏற்பட்டது. உப்புச் சத்தியாகிரகம் போன்ற போராட்டங் களில் கலந்து கொண்டு பலமுறை சிறைக்குச் சென்றார். உப்புச் சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட போது காவலர்கள் அவர் மண்டையில் அடித்ததால் மயக்கமுற்று மருத்துவமனையில் கிடந்தார். சிறையில் இருந்தபோது நூல்கள் பலவற்றை எடுத்துத் தம் அறிவை வளர்த்துக் கொண்டார். இத்தகைய அறிஞருக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.25 லட்சம் செலவில் நினைவுத் தூண் நிறுவப்படும்.
2 நாளாக அதிமுக வெளிநடப்பு
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை புதன்கிழமை காலை 9.30 மணிக்கு கூடி யதும், ஒரு பிரச்சனை குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பேச அனுமதி கோரினார். நீங்கள் கொடுத்திருக்கும் தீர்மானம் என்பது பரிசீல னையில் உள்ளது என்று பேர வைத் தலைவர் மு. அப்பாவு தெரிவித்தார். இதை ஏற்க மறுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப் பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த னர். இதே விவகாரத்திற்காக செவ்வாய்க்கிழமையும் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். புதன்கிழமை அதிமுக வினர் வெளிநடப்பு செய்த நிலையில், அக்கட்சி எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம் மட்டும் அவையின் உள்ளே இருந்தார்.