tamilnadu

img

விவசாயிகள், தொழிலாளர்கள் சங்கத் தலைவர்கள் வேளாண் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை

சென்னை, ஜன. 8 - வேளாண்துறை அமைச்சர், அதிகாரிக ளுடன் நடந்த பேச்சுவார்த்தை திருப்திகர மாக இருந்தது என்று விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அ.இ.விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 5ஆம் தேதி முதல் பத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தொடர் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. வேளாண்துறை அமைச்சர் பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததை யொட்டி 5ஆம் தேதி மாலை போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. 

அதனடிப்படையில் (07.01.2022)வெள்ளி யன்று தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் மாநில நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.  இப்பேச்சுவார்த்தையில், அமைச்சருடன் அரசின் சார்பில் வேளாண்மை துறை செயலாளர் சமயமூர்த்தி, வேளாண்மை துறை இயக்குநர் அ.அண்ணாதுரை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். விவசாயிகள் சங்க மாநில பொதுச்செய லாளர் பெ.சண்முகம் தலைமையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் வி.சுப்பிரமணியன், மாநில துணைத்தலைவர் டி.ரவீந்திரன், மாநில செயலாளர் ஜி.மாதவன் ஆகியோரும் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மாநில பொதுச்செயலாளர் வி.அமிர்தலிங்கம், மாநில துணைத்தலைவர் மலைவிளைபாசி, மாநில  செயலாளர் ஜி.ஸ்டாலின் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் நாகை மாலி, கந்தர்வ கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர்எம்.சின்னதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். கீழ்கண்ட கோரிக்கைகள் குறித்து விரிவான முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 1.மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து முறையான கணக்கெடுப்பு நடத்திட வேண்டும். முற்றிலும் அழிந்து போன நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். இதர பயிர்களுக்கு உற்பத்தி செலவை ஈடு செய்யக் கூடிய வகையில் இழப்பீடு வழங்க வேண்டும். 2.விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு வேலையில்லாக் கால நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.

3.தண்ணீர் தேங்கி பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.5000 வழங்க வேண்டும். 4.அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி போடுவதுடன், இறந்து போன கால்நடை களுக்கு அதனதன் மதிப்பிற்கேற்ப இழப்பீடு வழங்க வேண்டும். 5.மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை, வேலூர்  மாவட்டம் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த ஆட்சியில் மூடப்பட்டது. இதனால் விவசாயிகளும், தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஆலை களுக்கும் தலா பத்து கோடி ரூபாய் கடனாக வழங்கினால் இந்த ஆண்டே அரவையை துவக்க முடியும். இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 6.கரும்புக்கு மாநில அரசால் அறிவிக்கப் படும் பரிந்துரை விலையை கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் வருவாய்ப்பங்கீட்டு முறை சட்டத்தை நிறைவேற்றி நிறுத்திவிட்டார்கள். எனவே, வருவாய்ப்பங்கீட்டு முறை சட்டத்தை ரத்து செய்து மீண்டும் மாநில அரசின் பரிந்துரை விலையை அறிவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். 7.2020-21ஆம் ஆண்டு பயிர்க்காப்பீட்டு பிரீமியம் செலுத்தியவர்களில் காப்பீட்டு தொகை கிடைக்காமல் தகுதிவாய்ந்த பல்லா யிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர். விடுபட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதையடுத்து வேளாண் அமைச்சர் இந்திய ஒன்றிய பிஜேபி அரசு மழை நிவாரண  பணிகளுக்காக தமிழக அரசு கோரிய நிதியில் ஒரு ரூபாய் கூட இதுவரை வழங்கவில்லை. தமிழ்நாடு அரசு கடுமையான நிதி சிரமத்தில் இருக்கிறது என்பதைத் தெரிவித்தார். இருப்பினும் உங்களுடைய கோரிக்கையை ஏற்று  தமிழ்நாடு அரசு தனது நிதியிலிருந்து விவசாயி களுக்கு அனைத்து பயிர்களுக்கும் பாதிப்புக்கு ஏற்ப நிவாரணமாக 132.12 கோடி ரூபாய் வழங்க முதல்வர் இன்று (வெள்ளி) அறிவித்துள்ளார். ஓரிரு தினங்களில் இத்தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவித்தார். ஒன்றிய அரசிடமிருந்து நிதி வந்தால் முதல்வரிடம் பேசி மேற்கொண்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

பயிர்க்காப்பீட்டுத் தொகை

2020-21ஆம் ஆண்டு பயிர்க்காப்பீட்டு தொகை கிடைக்காமல் விடுபட்ட 192 கிராம விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை வழங்க ஒன்றிய அரசிடமிருந்து ஒப்புதல் கிடைத்து விட்ட தாகவும், சுமார் 80 கோடி ரூபாய் இதன் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் என்றும் தெரி வித்தார். இத்தொகையும் நிர்வாக ரீதியான பணிகள் முடிந்த பிறகு ஒரு சில நாட்களில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவிடும் என்று தெரிவித்தார்.

நம்பிக்கையளிக்கும் வகையில்...

கோமாரி நோயினால் மாண்டு போன மாடுகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு வரு கிறது என்றும், தடுப்பூசி பல மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறப்பதற்கான முயற்சிகள் விவா திக்கப்பட்டு வருவது குறித்து நம்பிக்கை யளிக்கும் வகையில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் 2020-21ல் அரைத்த கரும்புக்கு மாநில அரசு தருவதாக அறிவித்த ஊக்கத்தொகை டன்னுக்கு ரூ.192.50 இன்று முதல் விவசாயி களுக்கு வழங்கப்படுமென்றும், மாநில அரசின் பரிந்துரை விலை, வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தை ரத்து செய்வது குறித்து முதல் வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நட வடிக்கை எடுக்கப்படும் என்றும், அமைச்சர் தெரி வித்தார்.

விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை யில்லா கால நிவாரணம் கொடுக்க வேண்டும்  என்ற கோரிக்கை நியாயமானது. ஆனால்,  அரசின் நிதிநிலை அதற்கு இடங்கொடுக்க வில்லை. இருப்பினும் முதல்வரின் கவனத்திற்கு  கொண்டு சென்று ஏதாவது செய்ய இயலுமா  என்று பரிசீலிப்போம் என்றார். அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை திருப்தி கரமாக இருந்தது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை அதிகப்படுத்தி வழங்கவும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் கிடைக்கவும், தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது.