பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பை திரும்ப வழங்க வேண்டும், மனிதவள மேலாண்மைத் துறையின் பணியாளர் விரோத நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தி புதனன்று (செப். 20) தலைமை செயலக வளாகத்தில், தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவர் கு.வெங்கடேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.