புதுதில்லி,ஜன.18- இந்தியாவில் பட்டினிச் சாவே இல்லையா, அதை எப்படி உறுதியாக கூற முடியும்? என்று ஒன்றிய பாஜக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், பட்டினிச் சாவுகள் தொடர்பாக மாநிலங்களிடம் தரவுகள் பெற்றுஅறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் 5 வயது சிறுவன் பட்டினி யால் இறந்ததாக அதிர்ச்சி செய்திகள் வெளி யாகின. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதில், வறுமையில் வாடும் மக்களுக்கு சமுதாய உணவகங்களை ஏற்படுத்தி பட்டினிச் சாவுகளை தடுக்க வேண்டும் என்று கோரப் பட்டிருந்தது. இதுதொடர்பாக ஒன்றிய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 18 செவ்வாயன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, இந்தியாவில் பட்டினிச் சாவே இல்லை என ஒன்றிய அரசு தெரிவித்தது. இத னால் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த நீதிபதிகள், நாட்டில் பட்டினிச் சாவே இல்லை என்று எப்படி கூற முடியும் என ஒன்றிய அர சுக்கு கேள்வி எழுப்பியது. பட்டினிச் சாவுகள் தொடர்பாக மாநில அரசுகளிடம் இருந்து தர வுகள் பெற்று, அதை சேகரித்து அறிக்கை யாக சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் பட்டினி சாவு குறித்து, ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தின் (UNICEF) 2019 ஆம் ஆண்டு வெளியிட்ட ‘உலகின் குழந்தைகளின் நிலை 2019’ என்ற தலைப்பிலான அறிக்கையில், கடந்த 2018 ஆம் ஆண்டில் ஐந்து வயதுக்குட்பட்ட 8 லட்சத்து 82 ஆயிரம் குழந்தைகள் இறப்பு கள் இந்தியாவில் பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிடுகிறது. மேலும், ஊட்டச்சத்து குறை பாடு காரணமாக இந்தியாவில் ஐந்து வயது க்குட்பட்ட குழந்தைகளில் 69 சதவிகிதம் பேர் இறந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.