tamilnadu

img

அடையும் துன்பம் கிள்ளிடு!

உயர்ந்த மரத்தின் உச்சியில்
    உருதி மிக்கக்  கூட்டினை 
வியக்கும் வண்ணம் கட்டியே  
    விரும்பி வாழ்ந்தது குருவியே!

கயமைக் குணத்தை கொண்டதாம்
    கடுவன் குரங்கும் அங்கேயே
  வயது  மூப்பில் வாழ்ந்தது
    வாய்மை நேர்மை இன்றியே!

ஒருநாள் மழையும் பெய்தது
    ஒளிந்து  குருவிக் கூட்டிலே
அருமை யாக  இருந்தது
    அதன்மேல் மழையைத் தவிர்த்தது!

மழையில் நனைந்த குரங்கிடம்
    மனதில் வருத்தம் கொண்டிட
மழையில் நீயும் நனைகிறாய்
    மறையும் கூட்டைக் கட்டாமல்!

அறிவு சொன்ன குருவிமேல்
    அடங்கா கோபம் குரங்கிற்கு
அற்பக் குருவி எனக்குநீ
    அறிவு சொல்லத் தகுதியோ?

கொதித்து ஏறி மரத்திலே
    குருவிக் கூட்டைப் பிய்த்தது
மதித்து நன்மை செய்யினும்
    மனதில் கொள்ளா குரங்கது.
          
நல்லதைச் சொல்லும்  போதும்நீ
    நல்லவர் பார்த்து சொல்லுக!
அல்லவை செய்யும்  மூடர்க்கு
    அறிவுரை  சொல்லல் கேடாகும்.