தேசிய தலை நகர் தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சி செய்து வருகிறது. முதல்வராக அதிஷி உள்ள நிலையில், தில்லி மாநிலத்தின் போக்குவரத்து, சட்டம், வருவாய் துறை அமைச்சராக உள்ள கைலாஷ் கெலாட் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும் ஆம் ஆத்மியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் ராஜி னாமா செய்யப்போவதாக கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக கடிதத்தில் கைலாஷ் கெலாட் கூறுகையில்,”தில்லி அரசு தனது பெரும்பாலான நேரத்தை ஒன்றிய அர சுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கவே பயன்படுத்தி வருகிறது. இந்த நிலைமை நீடித்தால் தில்லியில் வளர்ச்சியை காண முடியாது. தற்போதைய சூழலில் ஆம் ஆத்மி கட்சி மக்களிடம் இருந்து விலகி உள்ளது. வாக்குறுதிகள் நிறைவேற்றப் படவில்லை என்பதற்கு தூய்மையான யமுனை திட்டம் ஒரு எடுத்துக்காட்டு. இன்னும் ஆம்ஆத்மி கட்சியை நம்பிக் கொண்டிருக்க வேண்டுமா? என்ற சந்தே கமும் எழுகிறது. எனவே ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. எனவே நான் ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பி னர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கி றேன். ஆனால் மக்களுக்கு சேவை செய்ய அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன்” என அதில் கூறப்பட்டுள்ளது. பாஜகவின் சித்து விளையாட்டா? அடுத்த சில மாதங்களில் தில்லி சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்த கைய சூழலில் ஆம் ஆத்மியின் தேசிய அளவிலான தலைவரும், அமைச்சரு மான கைலாஷ் கெலாட் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்காக ஆம் ஆத்மி எம்எல்ஏக்களிடம் பாஜக குதிரை பேரத் தில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளி யாகி வந்தது. ஒருவேளை போல கைலாஷ் கெலாட்டின் ராஜினாமா விவ காரத்தில் பாஜகவின் சித்து விளை யாட்டும் எதுவும் இருக்குமோ? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.