சென்னை, ஜூன் 18- சென்னை மற்றும் புறநகர்ப் பகுதி களில், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவுவதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும், நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மேலும், தமிழகத் தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவித்திருந் தது. இந்நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் ஞாயிறன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை திருவான்மியூர், வேளச்சேரி, கோயம்பேடு, மதுர வாயல், போரூர், அய்யப்பதாங்கல் உள்ளிட்ட இடங்களின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசானது முதல் கன மழையும் பெய்து வருகிறது. இதனால் இருச்சக்கர வாகன ஓட்டிகள் சிறிது பாதிக்கப்பட்டனர். சென்னை மாநகர பகுதிகளில் சனிக்கிழமை முதலே, ஒருசில இடங்க ளில் மழை பெய்து வந்தது. இந்நிலை யில், ஞாயிறன்று (ஜூன் 18) காலை முதல் மாநகரின் பல்வேறு பகுதி களில் கனமழையும், ஒருசில இடங்க ளில் மிதமான மழையும் பெய்து வரு கிறது. குறிப்பாக, கோயம்பேடு, வான கரம், அரும்பாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை யும் எழும்பூர், பெரியமேடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழையும் பெய்தது. கடந்த சில நாட்களாக கடும் வெயி லால் அவதிப்பட்டு வந்த சென்னை நகர மக்கள் இந்த திடீர் மழையால் மகிழ்ச்சி யடைந்தனர். சென்னை முழுவதும் குளு மையான சூழல் நிலவுகிறது.