tamilnadu

img

குஜராத் அதானி துறைமுகத்தில் வந்திறங்கிய ரூ.21,350 கோடி போதைப்பொருள் குறித்து மோடி அரசு வாய் திறக்க மறுப்பது ஏன்?

புதுதில்லி,டிச.21-  குஜராத் அதானி துறைமுகத்தில் வந்திறங்கிய ரூ.21,350 கோடி போதைப்பொருள் குறித்து மோடி அரசு வாய் திறக்க மறுப்பது ஏன்? என்று  நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பினார். விதி 193 இன் படி டிசம்பர் 21 அன்று  மக்களவையில் நடைபெற்ற விவா தத்தில் சு.வெங்கடேசன் எம்.பி., பேசியதாவது:   போதைப் பழக்கத்திற்கு அடிமை யாதல், அந்த பிரச்சனையை அரசு  கைக்கொள்ள வேண்டிய நடவடிக்கை கள் சம்பந்தமான இந்த விவாதத்தில் மிக முக்கியமாக போதையினுடைய பாதிப்புகள், ஆபத்துகளை பற்றி  பலரும் இங்கே எடுத்து வைத்திருக் கிறார்கள்.

போதை மறுவாழ்வு என்பது எவ்வ ளவு கடினமான ஒரு நிலை, குறிப்பாக  புதிய தலைமுறையினர் பள்ளி குழந்தை களை குறி வைத்து நடக்கிற இந்த வணிகம், அது ஏற்படுத்துகிற பாதிப்பு கள் இன்னும் சரியாக சொல்லப் போனால் பள்ளிக்கூடங்களில் கல்வி நிலையங்களில் மன அழுத்தம் நிறைந்த மாணவர்களை நோக்கி இவர்கள் எப்படி காய்களை நகர்த்துகிறார்கள். முதலில் அந்த மாணவனை தனது வலையில் விழ வைத்து, பிறகு அந்த  மாணவன் மூலம் அங்கே ஒரு பெரிய நெட்வொர்க் பின்னப்படுவது பற்றி நிறைய ஆய்வுகளும் குறிப்புகளும் வந்திருக்கிறது. இந்த வகைகளில் இதில் இரண்டு பிரச்சனைகள் பற்றி  பேசுகிறார்கள். அதில் ஒன்று,  பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கு மான இடைவெளி, அது ஏற்படுத்து கிற மன‌ இடைவெளி, அது மாண வர்களை போதைப் பழக்கத்திற்கு அடி மையாவதற்கான வாய்ப்பை அதிகப் படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக் கின்றன. ஒரு கோணம், பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான உறவு சார்ந்தது. மற்றொரு கோணம், அரசு அதிகாரத் திற்கும் போதை வணிகத்துக்கும் இருக்கிற உறவு சார்ந்தது. 

புதிய தலைமுறை அரசியல்மயப் படுவதை தடுப்பதில் திசை திருப்பு வதில் போதைப் பொருட்களுக்கு மிக முக்கியமான பங்கு இருக்கிறது. மக்களை மயங்கி விழ வைக்கிற எந்த ஒன்றும் அரசு அதிகாரத்தினுடைய ஆசி பெற்றதாகத்தான் இருக்க முடியும். இதை நான் சொல்லவில்லை, அர்த்த சாஸ்திரம் இதைப் பற்றி மிக விரிவாக பேசுகிறது. எப்படி எல்லாம் ஆட்சியை நடத்து கிறவர்கள் மக்களை திசை திருப்புகிற, மயங்கி விழச் செய்கிற போதைப் பழக்க பிரச்சனையை கைக்கொள்ள வேண்டும். பெரும் கூட்டத்துக்குள் ஒரு  பாம்பு நுழைவதைப் போல மக்கள் திர ளுக்குள் இவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அர்த்த சாஸ்திரம் பேசுகிறது. அந்தவகையில் அரசு அதிகாரத் திற்கும் போதை வணிகத்திற்குமான உறவு பற்றி இந்த அவை மிக அழுத்த மாக கவனம் செலுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

இரண்டு முக்கியமான முன்னுதா ரணங்களை இங்கே நான் சொல்ல வேண்டும். போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்துவதில் ஒரு சிறந்த முன்னு தாரணம் தமிழகத்தில் இருந்த முன்னு தாரணம். தென் தமிழ்நாட்டில் தென் மண்டல  ஐஜி இன்றைக்கு எடுத்து இருக்கிற நடவடிக்கை என்பது கடந்த 9 மாதங்களில் என்டிபிஎஸ்(NDPS) வழக்கு 2 ஆயிரம் வழக்குகளில் குற்ற அறிக்கையை நீதிமன்றத்திற்கு தாக்கல் செய்து ஒரு சாதனையை புரிந் திருக்கிறார். இதற்காக உயர்நீதிமன்ற மதுரை கிளை அவரை பாராட்டி யுள்ளது.  அதேபோல போதைப் பொருள் தடுப்பு பிரச்சனைகளில் சி ஆர் பி சி (CRPC) 102 இன் 1873 வங்கிக் கணக்கு கள் முடக்கப்பட்டுள்ளது. 1376 நபர் களுக்கு நன்னடத்தைக்கான பிணை பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

என் டி பி எஸ் (NDPS) 1985 இன்படி  69 பேருடைய சொத்துக்கள் முடக்கப் பட்டுள்ளன. இதனை தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க்  ஐபிஎஸ் நடவடிக்கை எடுத்திருக்கிறார். உயர்நீதிமன்றம் பாராட்டியிருக்கிற அவருக்கு நமது பாராட்டுகளும். இரண்டாவது மிக மோசமான முன்னுதாரணம் அதானியினுடைய துறைமுகம் சார்ந்தது. குஜராத்தில் உள்ள முந்தரா துறைமுகத்தில் 2023 ஜூலை மாதம் 350 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பிடி பட்டுள்ளது. 2021 செப்டம்பர் மாதத் தில் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பி லான 3 ஆயிரம் கிலோ ஹெராயின் மூன்று கண்டெய்னர்களில் வந்து  இறங்கியதாக செய்திகள் தெரிவிக்கின் றன. ஆனால் இது பற்றி என்ன நட வடிக்கை எடுக்கப்பட்டது? என்று மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது. ஊடகங்களும் தொடர்ந்து எழுப்புகின்றன. ஆனால் தேசிய புலனாய்வு முகமையோ, சுங்கத் துறையோ இது பற்றி வாய்திறக்க மறுப்பது ஏன்? இவ்வாறு அவர் பேசினார்.