tamilnadu

img

தமிழ் மரபை சிதைக்கும் இந்துத்துவ அரசியல்! - சு.வெங்கடேசன் எம்.

வைகாசி அனுஷத்தில் திருவள்ளுவர் பிறந்தார் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருப்பது தமிழ் மரபை சிதைக்கும் இந்துத்து அரசியல் என்று சு.வெங்கடேசன் எம்.பி விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

"பாரத சனாதன மரபின் மாபெரும் தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு, பண்டைய தமிழ் நாள்காட்டியின்படி, வைகாசி அனுஷத்தில், அவரது பிறந்தநாளில், தேசம் தனது ஆழ்ந்த மரியாதையை செலுத்துகிறது. கம்பீரமான திருக்குறளில் பொதிந்துள்ள பக்தி, கர்மம் மற்றும் ஞான யோகங்களின் ஆரோக்கியமான கலவையுடன் ஒருங்கிணைந்த தர்ம வாழ்க்கை குறித்த அவரது போதனைகள், தனிநபர் மற்றும் கூட்டு வாழ்க்கையில் மனிதகுலத்தை வடிவமைத்துத் தொடர்ந்து வழிநடத்துகின்றன. இது தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் ஆட்சியாளர்கள் உள்பட அனைவருக்கும் ஒரு விரிவான மற்றும் நீடித்த கட்டமைப்பை வகுக்கிறது. அவரது குறள்கள் ஞானத்தின் தூணாக விளங்கி, #வளர்ச்சியடைந்தபாரதத்தை நோக்கிய நமது கூட்டு தேசிய பயணத்தை ஊக்குவிக்கவும் வழிநடத்தவும் நித்திய மதிப்புகளைப் பயன்படுத்துகின்றன.”

இந்த நிலையில், வைகாசி அனுஷத்தில் திருவள்ளுவர் பிறந்தார் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருப்பது தமிழ் மரபை சிதைக்கும் இந்துத்து அரசியல் என்று சு.வெங்கடேசன் எம்.பி விமர்சித்துள்ளார்.

இது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி கூறியதாவது:

“வைகாசி அனுஷத்தில் திருவள்ளுவர் பிறந்தார் என்பதை வெறும் பொய் என்று கருதாமல் தமிழ் மரபை சிதைக்கும் இந்துத்துவாவின் அரசியல் தாக்குதல் என கண்டறிவது தான் மெய் பொருள் காணும் அறிவு.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.