சென்னை,ஜூன் 20- தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்கள் மனம் தளர வேண்டாம் என்ற முதல்வர் மு.க..ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு கள் திங்களன்று(ஜூன் 20) வெளி யிடப்பட்டன. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள், மேற்படிப்பு களில் கவனம் செலுத்தி உங்களது வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்ள வாழ்த்துகிறேன்! தேர்ச்சி பெறாதவர்கள், மனம் தளர வேண்டாம்! அடுத்த முயற்சியில் தேர்வு பெறுங்கள்! உங்களுக்கான வெற்றி காத்திருக்கிறது!” என்று தெரிவித்துள்ளார்.