நாகர்கோவில், அக்.16- சிஜடியு தமிழ் மாநில 15வது மாநாடு கன்னியா குமரியில் நவம்பர் 4,5,6 தேதி களில் நடைபெறுவதை ஒட்டி மாவட்ட அளவிலான கல்லூரி - பள்ளி மாணவ மாணவியர்களுக்கான கலை இலக்கிய போட்டிகள் அக்டோபர் 15 சனியன்று அழ கிய மண்டபத்தில் உள்ள முஸ்லீம் கலைக் கல்லூரி யில் நடைபெற்றது. பாட்டு, கவிதை, பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன. பள்ளி மாணவ மாணவி யர்களுக்கு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலைப் பள்ளி என 3 நிலைகளில் முதல், இரண்டாவது, மூன் றாவது மற்றும் ஆறுதல் பரிசுகள் ஒவ்வொரு நிலை யிலும், ஒவ்வொரு போட்டி களும் தனித்தனியாக நடத் தப்பட்டன. கல்லூரி மாணவ- மாணவியருக்கு ஓவியம் மற்றும் கவிதைப்போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளை முஸ்லீம் கலைக்கல்லூரி முதல்வர் ஜனாப் எச்.முகமது அலி துவக்கி வைத்தார். நிகழ்ச் சிக்கு தக்கலை ஹலீமா தலைமை வகித்தார். முன் னாள் நாடாளுமன்ற உறுப்பி னர் ஏ.வி.பெல்லார்மின், முன் னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், மாநாட்டு வரவேற்புக்குழு தலைவர் ஜி.செலஸ்டின், சிஐடியு மாவட்ட தலைவர் பி.சிங்கா ரன், நிர்வாகிகள் கே.பி.பெரு மாள், எம்.சித்ரா, எச்.ஜான் சவுந்தர்ராஜ், ஜெயகாந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.