சேலம், மார்ச் 27 - சேலம், ஆத்தூர் ஊரக காவல் நிலைய எல்லை அம்மம் பாளையத்தில் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. ரீச் அகடமி நீட் கோச்சிங் சென்டர் நடைபெற்று வருகிறது. இதில், 226 மாணவ - மாணவிகள் பயின்று வரு கிறார்கள். அதில் 53 மாணவர்கள் பள்ளி யில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். இதில் நீட்தேர்வு பயிற்சி பெறும், கள்ளக்குறிச்சி குன்றுமேடு எடுத்த வாய்நத்தம் ஊரைச் சேர்ந்த சந்துரு (19) என்கிற மாணவர், நீட் பயிற்சி வகுப்பிற்கு சென்றவர். அவர் தங்கியிருந்த விடுதி யில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். அவருடன் அறையில் தங்கி இருந்த பாலாஜி என்ற மாணவர் விடுமுறைக்கு வீட்டுக்கு சென்றுவிட்டு, காலை விடுதி அறைக்கு வந்த பார்த்தபோது, சந்துரு தூக்கிட்டு நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசா ரணை மேற்கொண்டு அவரது உடலை, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவத்தை அறிந்த மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இந்திய மாணவர் சங்கத்தி னர் மருத்துவமனைக்கு சென்று இறந்த மாணவனின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா செய்தியாளர்களி டம் கூறுகையில், ஒன்றிய மோடி அரசு, மாணவர்களின் மருத்துவக் கனவை சீர்குலைத்து வருகிறது. இந்த நீட் தேர் வால், மாணவர்கள் கடும் மன உளைச்ச லுக்கு உள்ளாகி வருகின்றனர். அனிதா முதல் சந்துரு வரை பல உயிர்கள் இந்த நீட் தேர்வு பயத்தால் பலியாகி உள்ளனர். ஒன்றிய மோடி அரசின் நீட் தேர்வு நீக்கப்பட வேண்டும். இறந்த சந்துருவின் குடும்பத் திற்கு நீதி வழங்க வேண்டும் என்றார். முன்னதாக, மருத்துவமனையில், சந்துருவின் உறவினர்களுக்கு இந்திய மாணவர் சங்க சேலம் மாவட்டச் செய லாளர் பவித்ரன், தலைவர் அருண்குமார் டார்வின், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், ஓமலூர் தாலுகா செயலாளர் என்.ஈஸ்வரன், ஏற்காடு ஒன்றிய செயலாளர் நேரு, மாவட்ட குழு உறுப்பினர் ஜி.கவிதா, பர மேஷ்வரி உள்ளிட்ட தலைவர்கள் ஆறு தல் கூறினர்.