மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி சி.வ. அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அரவிந்தசாமி, மாநிலத் துணைத் தலைவர் சம்சீர் அகமது, தூத்துக்குடி மாவட்ட தலைவர் கிஷோர் குமார் உள்ளிட்ட மாணவர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.