tamilnadu

img

மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர்

மேலும் கிடப்பில் போட திட்டமா?

சென்னை, மார்ச் 8 - ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்யும் மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி  மீண்டும் தமிழக அரசுக்கே திருப்பி  அனுப்பி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத் தில் பணத்தை இழந்து, இப்போது வரை பலரும் தற்கொலை செய்து வரு கின்றனர். இதனால், இந்த தற்கொலை கள் தடுக்கும் வகையில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிப்பது மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு அளித்த அறிக்கையின் படி, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத் தைத் தடை செய்யும் வகையில், 2022 செப்டம்பர் 26 அன்று நடைபெற்ற அமைச் சரவை கூட்டத்தில் அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

இதற்கு தமிழ்நாடு  ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்த பின், அக்டோபர் 3 அன்று அரசிதழிலும் வெளியிடப்பட்டது.  பின்னர், ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்யும் அவரச சட்டத்தை நிரந்தர மாக்கும் வகையில், புதிய சட்ட மசோதா அக்டோபர் 17 அன்று கொண்டு வரப்பட்டு, அது தமிழ்நாடு சட்ட மன்றத்தில் அக்டோபர் 19 அன்று நிறை வேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புத லுக்காக அக்டோபர் 28 அன்று அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், நான்கு மாதங்களுக்கு மேலாகியும் இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலதாமதம் செய்து வந்தார். இதற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பும் தெரிவித்து வந்தது. இதனிடையே, கடந்த பிப்ரவரி 24 அன்று ஆளுநர் மாளிகையில் இருந்து தமிழ்நாடு அரசுக்கு ஒரு கடிதம் வந்தது.  அதில், ஆன்லைன் ரம்மி விளையாட்டை  தடை செய்வதற்கான சட்ட மசோதாவில் சில சந்தேகங்கள் இருப்பதாகவும், அது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறும் தமிழ்நாடு அரசிடம் கேட்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு அரசின் சட்டத்துறையும், ஆளுநர் எழுப்பிய சந்தேகங்களுக்கு 24  மணி நேரத்தில் விளக்கங்களை தயா ரித்து, பிப்ரவரி 25 அன்று அனுப்பி வைத்தது.  இந்நிலையில்தான், ஆன்லைன் ரம்மி, ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல், தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி, மார்ச் 8 அன்று திருப்பி அனுப்பியுள்ளார். மசோதாவில் மேலும் சில திருத்தங்களை செய்து அனுப்பும்படி ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.