tamilnadu

img

தொழிற்சாலை சட்டத் திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு

சிபிஎம், சிபிஐ, விசிக வெளிநடப்பு!

சென்னை, ஏப்.21- 1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தை தமிழ்நாடு மாநிலத்திற்கு பொருந்தும் வகையில் மேலும் திருத்தம்  செய்வது என்ற பெயரில் எட்டு மணி நேரம் வேலை என்பதை 12 மணி நேரமாக மாற்றுவதற்காக கொண்டு வரப்பட்ட சட்ட மசோதாவிற்கு  பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சட்ட மன்றத்தில் இருந்து சிபிஎம், சிபிஐ, விசிக ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன. மசோதாவின் சாராம்சம் தமிழ்நாடு சட்டப்பேரவையில், வெள்ளியன்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தாக்கல் செய்த மசோதாவில், ‘‘தமிழ்நாடு பெரிய உற்பத்தி நிறுவனங்களின் மையமாக விளங்குகிறது. இது நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலை களையும் தொழில்சார் தொழிலாளர் களையும் கொண்டுள்ளது.  வேலை நேர சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்காக, எளிதில் பின் பற்றுகிற வேலை நேரங்களுக்கு சட்டப் பூர்வ வழிவகைகளை உருவாக்குவதன் மூலம்,

தொழிலாளர்களுக்கு, குறிப்பாக, பெண் பணியாளர்கள், தொழிலகம் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரம் ஆகியவற்றிற்கு கொண்டு வரக்கூடிய நன்மைகளின் எண்ணிக்கையை மேற்கோள் காட்டி, பல்வேறு தொழில கங்கள் மற்றும் தொழில்துறை சங்கங்களி டமிருந்து விண்ணப்பங்கள் மாநில அரசால் பெறப்படுகிறது.  மேற்கூறப்பட்ட மையத் தொகுப்புச் சட்டத்தின் 127 ஆம் பிரிவானது, தொழிற் சாலை அல்லது தொழிற்சாலைகளின்  வகைகள் எதற்கும் தொடர்புடைய தும், அத்தகைய வரையறைகள் மற்றும்  கட்டுப்பாடுகளுக்குட்பட்டும், அது பொருத்தமெனக் கருதலாகும் அத்த கைய காலத்திற்கும், ஓய்வு இடைவெளி களை உள்ளடக்கிய கூடுதல் நேரம் மற்றும் நீட்டிக்கப்பட்ட நேரங்கள் உட்பட, எளிதில் பின்பற்றுகிற வேலை  செய்யும் நேரங்களை அறிவிக்கையின் மூலம் வழங்குவதற்கு மற்றவற்றுக் கிடையில், மாநில அரசினை இயலச்  செய்கிறது. இதன்மூலம் வேலை நேரம்  12 மணி நேரமாக உயர்த்தப்படும், அதற்கு உரிய சம்பளம் வழங்கவும் இந்த சட்டத்தில் வழிவகை செய்யப் பட்டுள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது

கடும் எதிர்ப்பு

பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான வெள்ளியன்று (ஏப்.21) இந்த  மசோதாவை நிறைவேற்ற தொழிலாளர்  நலத்துறை அமைச்சர் அறிமுகம் செய் தார். அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,  விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ்,  மனித நேய மக்கள் கட்சி, தமிழர் வாழ்வு ரிமை கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன் னேற்ற கழகம், பாட்டாளி மக்கள் கட்சி,  பாஜக ஆகிய கட்சிகளின் உறுப்பினர் கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு

இதனையடுத்து நடந்த விவாதத் தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் நாகை மாலி, ‘‘முழுக்க முழுக்க தொழி லாளர்களுக்கு விரோதமான இந்த சட்ட  மசோதா, 8 மணி நேர வேலையை நீர்த்துப் போக செய்கிறது. எனவே, இதை நிறை வேற்ற கூடாது’’ என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்றக் குழு தலைவர் டி.இராமச்சந்தி ரன், விடுதலை சிறுத்தைகள் கட்சித்  தலைவர் சிந்தனை செல்வன், காங்கிரஸ்  சட்டமன்றத் தலைவர் கு.செல்வப்பெருந் தகை, தமிழர் வாழ்வுரிமைக் கட்சி யின் தலைவர் டி.வேல்முருகன், மதிமுக  தலைவர் சதன் திருமலை குமார், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவா ஹிருல்லா ஆகியோர் பேசுகையில்,  

‘‘தொழிலாளர்கள் மற்றும் தொழிற் சங்க உரிமைகளை முற்றிலும் பறிக்கும்  வகையில் ஒன்றிய பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர் நடவடிக்கை யாக 1948 ஆம் ஆண்டு தொழிலாளர் நலச் சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வர முயற்சிக்கிறது. இதனால் 8 மணி நேர  வேலைக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. பல்லாண்டு காலமாக போரா டிப் பெற்ற 8 மணி நேர வேலை, மே  தினம் போன்ற பல்வேறு உரிமைகளை யும் ஒன்றிய பாஜக அரசு சத்தமில்லா மல் பறிக்க முயல்கிறது. நூற்றாண்டு காலமாக பாதுகாத்து வரும் தொழிலா ளர் நலனை, இந்தச் சட்ட திருத்தத்தைக்  கொண்டு வந்து பெரும் நிறுவனங்கள் மூலம் சிதைப்பதற்கான வாய்ப்பு இருக் கிறது.  உழைப்பாளி மக்களுக்கு எதிராக  ஒன்றிய பாஜக அரசு கொண்டுவரும் சட்ட திருத்தங்களுக்கு இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு இயக்கங் களும் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்து உள்ளன. இத்தகைய சூழ்நிலையில், ஒன்றிய அரசு கொண்டு வரும் சட்ட திருத்தத்திற்கு தமிழ்நாட்டில்  திமுக அரசும் துணை நிற்பதை கூட்ட ணிக் கட்சிகள் கடுமையாக எதிர்க் கிறோம் என்று குறிப்பிட்டு இந்தச் சட்ட  மசோதாவுக்கு கடும் எதிர்ப்பை தெரி வித்தனர்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தொழிற்சாலைகளை பாதுகாக் கும் அதே நேரத்தில் தொழிலாளர்களை யும் பாதுகாக்க வேண்டும். எனவே, இந்த மசோதாவை மறு ஆய்வுக்கு உட் படுத்த வேண்டும் என்றார். பாஜக சட்டமன்ற குழு தலைவர்  நயினார் நாகேந்திரன் தொழிலாளர் களுக்கு பாதிப்பு இல்லாமல் இந்தச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கடும் எதிர்ப்பு எழுந்தபோது, அரசு விடாப்பிடி யாக இருந்ததால் பெரும் கூச்சல்-குழப்பம் நிலவியது.

அமைச்சர்கள் விளக்கம்

இதனைத் தொடர்ந்து விளக்க மளித்த தொழிலாளர் நலத்துறை அமைச் சர் சி.வி.கணேசன், ‘8 மணி நேர வேலை, வார விடுமுறை, கூடுதல் ஊதியம்  என்ற ஷரத்துகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தொழிற்சாலை நெகிழ் வுத்தன்மைக்காகவே மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதற்கிடையில் பேசிய தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘‘எந்த தொழிற்சாலையாக இருந்தா லும் அதற்கு எதிராக அரசு இருக்காது.  அனைத்து நிறுவனங்கள் மற்றும் தொழிற் சாலைகளுக்கும் இந்த சட்டம் கொண்டு வரப்படவில்லை, தொழிலாளர்கள் விரும்பும் தொழிற்சாலைகளில் மட்டுமே ஆய்வு செய்து இந்த சட்ட  மசோதா அமல்படுத்தப்படும் என்றும்  இந்த சட்டத்திருத்தத்தால் தொழிலாளர் களுக்கு வேலை இழப்பும் ஏற்படாது’’ என்றும் கூறினார். மேலும் மின்னணு தொழில் நிறுவ னங்கள் இதுபோன்று ஒரு நெகிழ்வுத் தன்மையை எதிர்பார்க்கிறார்கள். ஆனாலும் ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கக்கூடிய சட்டத்திருத்தத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தவில்லை. அதுமட்டுமல்லாமல் இப்பொழுதே இது நடைமுறைக்கு வராது. ஓர் உயர் மட்டக் குழு அமைத்து ஆய்வு செய்யப் படும். பிறகு தமிழக அரசின் கொள்கை  அடிப்படையில்தான் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார்.

‘எட்டு மணி நேரம்  அடிப்படை உரிமை’

இதனையடுத்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன், ‘‘இந்த சட்டத்  திருத்தத்தால் தொழிலாளர்கள் மற்றும்  தொழிற்சங்க உரிமை பறிபோய்விடும் என்கிற தோழமைக் கட்சிகளின் கருத்து கள் மதிக்கப்பட வேண்டும். எட்டு மணி  நேர வேலை என்பது சர்வ சாதாரணமாக கிடைத்துவிடவில்லை. அதற்காக எத்தனை எத்தனை போராட்டங்கள் நடை பெற்றுள்ளன; அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதைப் பேச  வேண்டும் என்றால் நீண்ட நேரம் பேசிக்  கொண்டே இருக்கலாம். ஆனாலும், 8  மணி நேர வேலை என்பது தொழிலாளி  வர்க்கத்தின் அடிப்படை உரிமை. அதில்  ஒருபோதும் கை வைக்கக் கூடாது.  அதில் திமுக நிச்சயம் மாற்றம் செய் யாது. எனவே, தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் முதலமைச்சர் பார்த்துக் கொள்வார் என்று நம்பிக்கை  இருக்கிறது. ஆகவே நீங்களும் அதை  நம்ப வேண்டும்’’ என்றார். எனினும் கடும் எதிர்ப்பு நீடித்தது.  இந்நிலையில் மசோதா குரல் வாக்கெ டுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.  இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,  விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பி னர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து  பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

சட்டமாக்காமல் கைவிடுக: சிபிஎம்

சென்னை,ஏப்.21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:  தமிழ்நாடு சட்டமன்றம் தொழி லாளர்களின் வேலைநேரத்தை அதி கரிக்கும் சட்ட மசோதாவை நிறைவேற்றி இருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கடு மையான எதிர்ப்பையும் மீறி நிறை வேற்றப்பட்டிருக்கிறது.  தங்கள் எதிர்ப் பை பதிவு செய்துள்ள அனைத்து  கட்சி களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறது. இந்த மசோதாவை எந்த வகையிலும் ஏற்க முடியாது. 150 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமையை தமிழ்நாடு அர சாங்கம் ‘நெகிழ்வுத்தன்மை’ என்ற ஒற்றைச் சொல்லில் அதை இல்லாமல் செய்வது  தவறான நடவடிக்கை, தவறான முன்னுதாரணம்; மாற்ற முடியாத பழிச் சொல்லுக்கு அரசு ஆளாக நேரிடும். பாஜக ஏற்கனவே கொண்டு வந்துள்ள தை அனைவரும் எதிர்த்துள்ளோம்.  இந்தியாவிலேயே  இந்த மசோதாவை பாஜக அல்லாத ஒரு மாநில  அரசு கொண்டு வந்திருப்பது தமிழ்நாடு அரசுதான்.

60 மணி நேரத்திற்கும் மேலாக உழைக்கிறார்கள்

2019 ஆம் ஆண்டு தேசிய புள்ளி யியல் துறை இந்தியாவில் நேரப்பயன் பாடு குறித்த ஒரு அறிக்கையை வெளி யிட்டிருந்தது. அதில் இந்திய நகர்ப்புற உழைப்பாளர்கள்  வாரத்திற்கு 60 மணி நேரம், 47 நிமிடங்களும் நேரடியாக வேலை மற்றும் வேலை தொடர்பான காரணங்களுக்காக செலவிடுகிறார்கள் என்று சொல்லியிருக்கிறது. எட்டு மணி நேர வேலை சட்டப்படியாக இருக்கும்பொழுதே இந்த நிலைமை என்றால், அரசு சொல்கிற நெகிழ்வுத் தன்மை வந்துவிட்டால் என்ன நிலைமை ஏற்படும் என்பது விளங்கும். அதிக அளவு தொழிலாளர்கள் வேலைவாங்கப்படும் நாடுகளில் காம்பியா, மங்கோலியா மற்றும் கத்தார்  ஆகிய நாடுகள் மட்டும்தான் இந்தியா விற்கு பின்னே இருப்பதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்திருக்  கிறது. 2020 ஆம் ஆண்டு அப்போ தைய அதிமுக அரசு வேலைநேரத்தை அதிகரிக்க முயற்சித்தபோது  அதை  திமுக கடுமையாக எதிர்த்ததை சுட்டிக் காட்ட விரும்புகிறோம். மேலும், ஒன்றிய அரசும் இந்த முயற்சிக்கு எதிராக திமுக, பாஜக ஆளும் மத்தியப்பிரதேசம், உத்த ரப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங் களில் எட்டுமணி நேர வேலைநேரத்தை  பன்னிரண்டு மணி நேரமாக உயர்த்தி யதற்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தையும் தெரி வித்தது.

நிலைமை இப்படி இருக்கையில், நெகிழ்வுத்தன்மை என்பது தொழி லாளியை ஒட்டச்சுரண்டவும், முதலாளி களுக்கு உறிஞ்சிக் கொடுக்கவுமே வழிவகுக்கும். தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் வேலை நேரம் படிப்படியாக குறைக்கப்பட வேண்டும். டாக்டர் கலைஞர் கூட இந்தக் கருத்தை கடந்த காலத்தில் முன்வைத்திருக்கிறார்.  தொழிலாளர் நலனுக்கு முரணாகவும் சட்ட நியாயங்களுக்கு புறம்பாகவும் இந்த சட்டத் திருத்தம் இருக்கிறது.

உடனே கைவிடுக!

தேவைப்படும் காலங்களில் தொழிற் சாலை ஆய்வாளரிடம் அனுமதி பெற்று நெகிழ்ச்சியான வேலைநேரத்தை பெறு வதற்கு வாய்ப்பிருந்தும் வேலைநேரம் குறித்த எந்த சட்டத்திற்கும் மதிப்பளிக்க வேண்டியதில்லை என்பதற்கான ஒரு சட்டத்திருத்தம் கொண்டு வந்திருப் பது, சட்டத்தின் ஆட்சிக்குப் பதிலாக சட்டங் களே தேவையில்லை என்பதற்காக சட்டம் இயற்றுவதாகும். தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த மசோதாவை கைவிடுவதாக அறிவிக்க வேண்டும். இது 150 ஆண்டுகாலம் போராடி, பலர்  உயிர்துறந்து, பலர் வேலை இழந்து, குடும்பத்தை இழந்து சிறைக்குச்சென்று பெற்ற உரிமைகளை எந்த காரணத் திற்காகவும் இழக்க முடியாது, இழக்கக் கூடாது.  எனவே,  இந்த மசோதா சட்ட மாகாமல் கைவிடப்பட வேண்டும் என்கிற கோரிக்கையோடு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உறுதியாக தொடர்ச்சியாக போராடும். அனைத்து ஜனநாயக சக்தி களும் போராட முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.