tamilnadu

img

மியான்மரில் கடும் நிலநடுக்கம்!

மியான்மரில் கடும் நிலநடுக்கம்!

தாய்லாந்து, மலேசியா, இந்தியாவிலும் தாக்கம்

மியான்மரில் வெள்ளிக்கிழமை யன்று இந்திய நேரப்படி, வெள்ளிக் கிழமை காலை 11.50 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக  பதிவாகியுள்ளது.  இந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள கட்டடங்கள் குலுங்கின. இதன் தாக்கம் மியான்மரை ஒட்டியுள்ள தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டது. இதனிடையே, பகல் 12 மணி அள வில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் மியான்ம ரில் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நில நடுக்கத்தால் தாய்லாந்தில் 30 மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. கட்டடத்தில் 90 பேர் சிக்கியுள்ளதாகவும் மூன்று பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கங்களால் மியான்மரில் ஏற்பட்டுள்ள பதிப்புகள் முழுமையாக தெரிவிக்கப்படவில்லை. எனினும் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கலாம் முழுமையான விவரங்களை அரசாங்கம் வெளி யிடும்போது தான் அது தெரிய வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.