tamilnadu

img

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் அனுமதிக்கவே முடியாது

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கான தடையை எதிர்த்து, வேதாந்தா நிறு வனம், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தி ருந்தது. இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தரப்பில், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 25 பக்கங்கள் கொண்ட விரி வான அறிக்கையை உச்ச நீதிமன்றத்  தில் திங்களன்று தாக்கல் செய்துள் ளது. அதில்தான், “வேதாந்தா நிறு வனம் கடந்த 22 ஆண்டுகளாக சுற் றுச்சூழல் மாசை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காலத்தில் அடிப்படையான விதிமுறைகளைகூட வேதாந்தா நிறு வனம் பின்பற்றியது இல்லை. எனவே, இந்த விவகாரம், சுற்றுச்சூழல் பாது காப்பு தொடர்பானது என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் அனுமதிக்க முடியாது” என்று கூறப் பட்டுள்ளது. மேலும், வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்திருக்கும் மேல்முறை யீட்டு மனுவை அபராதத்துடன் தள்ளு படி செய்ய வேண்டும் என்றும் தமிழ்  நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கோரிக்கை வைத்துள்ளது. தூத்துக்குடியில் வேதாந்தா நிறு வனத்தின் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக கூறி கடந்த 2018-ஆம் ஆண்டு தொடர் போராட்டம் வெடித்தது. 100-வது நாள்  போராட்டத்தின் போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி நடைபெற்ற நிலையில், முந்தைய எடப்பாடி பழனிசாமி தலை மையிலான தமிழ்நாடு அரசின் காவல்  துறை  துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை  படுகொலை செய்தது. 100-க்கும்  மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து, எழுந்த போராட்  டங்கள் மற்றும் நெருக்கடியால் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக் கப்பட்டது.

இந்நிலையில் ஸ்டெர் லைட்  ஆலையை மீண்டும் திறக்கவும், ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றி, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் வேதாந்தா நிறுவனம் சார்பில்  உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்  நாடு அரசு, கழிவுகளை அரசே அகற்  றும் என்றும், அதற்கான செலவுகளை  ஆலை நிர்வாகமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தது. நீதி பதிகளும் அதற்கு அனுமதி அளித்த னர். இதைத்தொடர்ந்து தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் மேற்பார்வை யில், துணை ஆட்சியர் கவுரவ்குமார் தலைமையில் பல்வேறு வல்லுநர்கள்  அடங்கிய குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு, கடந்த ஜூன் மாதம் முதல் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து  ஜிப்சம்களை அகற்றி வருகிறது. இந்த பணிகள் சிசிடிவி கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையில் இருந்த 1.65 மில்லியன் மெட்ரிக் டன் ஜிப்சம் கழிவுகள் இருந்த நிலையில்,  இது வரை  45 ஆயிரம் மெட்ரிக் ஜிப்சம் அகற்  றப்பட்டுள்ளது. தொடர்ந்து கழிவுகள் அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடை பெற்று வருகிறது. இதனிடையே ஆலையை மூடி யதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம்  தொடரப்பட்ட வழக்கில் தொடர்பு டைய அரசாணைகள், ஆவணங்கள் மற்றும் சுருக்கமான எழுத்துப்பூர்வ வாதங்களை தமிழ்நாடு அரசு, ஸ்டெர்  லைட் ஆலை நிறுவனம் உள்ளிட்ட அனைத்து தரப்பும் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். மேலும் ஸ்டெர்லைட் ஆலை தொடர் பான அனைத்து மனுக்களும் ஆகஸ்ட் 22 மற்றும் 23 ஆகிய 2 நாட்க ளில் விசாரித்து முடிக்கப்படும் எனவும்  நீதிபதிகள் கூறியிருந்தனர்.  இந்நிலையில்தான் அடிப்படை யான விதிமுறைகளை கூட  வேதாந்தா நிறுவனம் பின்பற்ற வில்லை என்பதால், ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது என கூறப்பட்டுள்ளது.