புதுதில்லி, டிச. 11- நாட்டில் உள்ள அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசிகள் செலுத்தத் தேவையான தடுப்பூசிகளுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்க ளவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கேட்டி ருந்த கேள்விக்கு அமைச்சர் பதிலளித்துள் ளார். நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது, பி.ஆர். நடராஜன், முழு வதுமாக தடுப்பூசிகள் செலுத்திக் கொண்ட மக்களை அதிக அளவில் கொண்டுள்ள முதல் 10 நாடுகளின் பெயர்கள் மற்றும் இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலையும் என்ன என்றும், இந்தியாவில் தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டவர்கள் விவரம் என்ன என்றும், எல்லோருக்கும் தடுப்பூசி செலுத்து வதற்குத் தேவையான அளவு மற்றும் இருப்பு குறித்த விவரங்கள் என்ன என்றும், பற்றாக் குறை இருப்பின் அதனை எதிர்கொள்ள அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்றும் கேட்டிருந்தார். இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த ஒன்றிய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் பாரதி ப்ரவீண் பவார் கூறியதாவது:
தடுப்பூசி செலுத்தப்பட்டோர் விவரங்கள் குறித்து 2021 அக்டோபர் 31இன்படி, www.ourworldindata.org தளத்தில் கிடைக்கப்பெற்றுள்ள புள்ளிவிவரங்கள் படி, தடுப்பூசிகள் செலுத்திக்கொண்ட மக்களை அதிகம் கொண்ட முதல் 10 நாடுகள் (5 கோடிக்கும் அதிகமாக மக்கள்தொகை கொண்ட நாடுகளான) தென்கொரியா, ஜப்பான், இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, அமெரிக்கா, துருக்கி, பிரேசில் மற்றும் மெக்ஸிகோ என்பவைகளாகும். இதில் 2021 அக்டோபர் 31இன்படி முழுமை யாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட மக்களின் வீதப்படி, இந்தியா 17வது இடத்தில் உள்ளது. மக்கள் தொகையில், வயது வந்தவர்களில் 53 சதவீதத்தினர் இரண்டு தவணை கோவிட் 19 தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டுள்ளனர். 2021 டிசம்பர் 8இன்படி மதிப்பிடப்பட்ட வயது வந்த 93.9 கோடி மக்களில் 13.3 கோடிபேர் முதல் தவணை செலுத்திக் கொள்ள வேண்டியவர்கள். முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 33.6 கோடி பயனாளிகள் இரண்டாவது தவணை செலுத்திக் கொள்ள வேண்டியவர்கள். இதில் 17.2 கோடிப் பேர் ஆண்கள், 16.4 கோடிப் பேர் பெண்கள். 90,000 பேர் மற்ற பாலினத்தவர்கள். அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கும், 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள தகுதியுள்ள பயனா ளிகளுக்கு, முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசிகள் செலுத்தத் தேவை யான போதுமான தடுப்பூசிகள் கிடைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பதிலளித்துள்ளார்.
(ந.நி.)