tamilnadu

img

10 ஆண்டுகளாக உயர்த்தப்படாத மீட்டர் கட்டணத்தை உயர்த்துக!

சென்னை, ஆக. 25 - மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க கோரி வெள்ளியன்று (ஆக.25) தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆட்டோ ஒட்டுநர்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர். ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணம் 2013ஆம் ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டது. அதன் பின் கட்டணம் மாற்றி அமைக்க வில்லை. இதனையடுத்து வழக்கு ஒன்றை விசாரித்த உயர்நீதிமன்றம், 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கு ஏற்ப மீட்டர் கட்ட ணத்தை மாற்றி அமைக்க உத்தர விட்டது. இதனையடுத்து போக்குவரத்து இணை ஆணையர் எஸ்.கே.எம்.சிவக்குமரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு 2022ஆம் ஆண்டு மே மாதம் தொழிற்சங்கங்கள், நுகர்வோரிடம் கட்டணங்களை மாற்றி அமைப்பது குறித்து கருத்துக் கேட்டது. ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் கட்டணத்தை மாற்றி அமைக்காமல் உள்ளது. எனவே, மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்கவும், அரசே ஆட்டோ  செயலியை (ஃஆப்) தொடங்கவும் கோரி ஓட்டுநர்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம், மாவட்ட ஆட்சியர், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்த அறைகூவல் விடுத்தது. இதனையடுத்து, மீட்டர் கட்ட ணத்தை மாற்றி அமைக்க வேண்டும்,  இரு சக்கர வாகன (பைக்) டாக்சி யை தடை செய்ய வேண்டும், புதிய மோட்டார் வாகன சட்டத்தை விட வேண்டும், ஆன்லைன் அபராதத்தி லிருந்து ஆட்டோக்களுக்கு விலக்கு தர வேண்டும், பர்மிட் இல்லாமல் விதி களை மீறி இயங்கும் மெட்ரோ பச்சை நிற ஆட்டோவை பொதுசேவைக்கு அனுமதிக்கக் கூடாது என்பன உள்ளி ட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

தலைமைச் செயலகம் நோக்கி பேரணி

இதன் ஒருபகுதியாக ஆட்டோ டாக்சி தொழிலாளர் சங்கம் (மத்திய சென்னை) சார்பில் சென்னையில் தலைமைச் செயலகம் நோக்கி பேரணி நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ஆர்.கபாலி தலைமையில் நடைபெற்ற பேரணியை சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.கே.மகே ந்திரன் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சம்மேளனத்தின் செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம், “தமிழகத்தில் 3.20 லட்சம் ஆட்டோ  ஒட்டுநர்கள் உள்ளனர். உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு 18 மாதங்களாகி யும் அரசு மீட்டர் கட்டணத்தை உயர்த்தாமல் உள்ளது. இந்த ஆட்டோ தொழிலை சார்ந்து சுமார் 5 லட்சம் குடும்பங்கள் உள்ளன. எனவே, மீட்டர் கட்டணத்தை உயர்த்தி விரைவாக அறிவிக்க வேண்டும் என்றார்.

ஆக.28 பேச்சுவார்த்தை

பேரணியின் நிறைவாக சிந்தா தரிப்பேட்டை அருகே நடைபெற்ற கூட்டத்தில், சிஐடியு மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, ஆட்டோ சங்க பொருளாளர் கே.பிரபாகரன், சாலை போக்குவரத்து தொழி லாளர் சங்கத் தலைவர் எஸ்.கே.முரு கேஷ், பொதுச்செயலாளர் எம்.உதய குமார் உள்ளிட்டோர் பேசினர். இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில், உள்துறைச் செய லாளர் அமுதா அலுவலகத்தில் சங்கத் தலைவர்கள் மனு அளித்த னர். இந்த மனு மீது ஆக.28 அன்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். சம்மேளன பொதுச் செயலாளர் எம்.சிவாஜி, திண்டுக்கல்லில் நடை பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டார்.