மதுரை, நவ.16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட 24 ஆவது மாநாடு நவ.16 ஆம் தேதி திருமங்கலத்தில் தொடங்கியது. திருமங்கலத்தில் உள்ள தனியார் மஹாலில், தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் நினைவரங்கத்தில் நடைபெற்ற மாநாட்டில், மாநாட்டு செங்கொடியினை கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன் ஏற்றினார். தொடர்ந்து தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு அஞ்சலி செலுத்தினர். மாநாட்டுக்கு கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் த.செல்லக்கண்ணு, பி.ஜீவானந்தம், க. பிரேமலதா ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.ரவிச்சந்திரன் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். மாநாட்டு வரவேற்பு குழு செயலாளர் ஜி.முத்துராமன் வரவேற்றார். மாநாட்டை துவக்கி வைத்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார். மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்தார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய் தீர்மானங்களை முன்மொழிந்தார். பின்னர் வேலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் சு.வெங்கடேசன் எம்.பி., கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநாடு ஞாயிறன்றும் (நவ.17) நடைபெறுகிறது.