மயிலாடுதுறை, டிச.19 - மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தனியார் பள்ளி மாணவர்களால் அதிநவீன வானியல் தொலைநோக்கி வடிவமைக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன் முறையாக பள்ளி மாணவர் களால் நிகழ்த்தப்பட்டுள்ள இச்சாதனையை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். சீர்காழியில் இயங்கி வரும் சுபம் வித்யா மந்திர் சிபிஎஸ்சி பள்ளியில் தொலைநோக்கி பற்றிய பயிற்சி பட்டறை இரண்டு நாட்கள் நடைபெற்றது. இப்பயிற்சியில் 6 வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை பயிலும் 39 மாணவ-மாணவி கள் ஒரு குழுவாக சேர்ந்து தொலை நோக்கி பயிற்சி பட்டறை யின் மூலம் தாங்களாகவே தொலை நோக்கி செய்யும் பயிற்சி பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் சுதீஷ் ஜெயின் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக இஸ்ரோ விஞ்ஞானி இங்கர்சால் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி னார். தொலை நோக்கி பயிற்சி பட்டறையில் இளம் விஞ்ஞா னிகள் பரத்குமார், வேலுசாமி மற்றும் ரமேஷ் கண்ணன் ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். மாணவ - மாணவியர்கள் விஞ்ஞான விதிகளை ஆராய்ந்து, விஞ்ஞான கருவிகளை தாமே உருவாக்க இந்த பயிற்சி பட்டறையை ஏற்பாடு செய்ததாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
பள்ளிகளில் இது போன்ற பயிற்சி பட்டறை நடைபெறு வதில்லை. இந்தியாவிலேயே இதுவே முதல்முறை என் றும், தொலைநோக்கிகள் விஞ்ஞான ஆய்வுகளின் கண் களாக செயல்படுகிறது எனவும், இந்த தொலைநோக்கி யால் (டெலஸ்கோப்) 73 கோடி கி.மீ தூரத்தில் பயணிக்கும் வியாழன் கோளை பார்க்க முடியும். நட்சத்திரங்கள், கோள்கள், சூரிய குடும்பம் மற்றும் அண்டம் பற்றியும் விரிவாக மாணவர்களுக்கு விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த பயிற்சி பட்டறையில் சீர்காழி மற்றும் அதனை சுற்றியுள்ள தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர். மாணவர்கள் உருவாக்கிய தொலை நோக்கியை கொண்டு பள்ளி வளாகத்தில் இரவு நேரங் களில் அனைத்து மாணவர்கள், பெற்றோர்கள் வானில் தென் படும் வியாழன், செவ்வாய் கோள்களை பார்த்துமகிழ்ந்தனர்.