tamilnadu

img

உயர்நீதிமன்றங்களில் மாநில மொழிகள்: ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?

புதுதில்லி, பிப்.5- உயர்நீதிமன்ற நடவடிக்கை களில் மாநில மொழிகளைப் பயன்  படுத்த ஒன்றிய அரசாங்கம் எடுத்த நட வடிக்கைகள் என்ன என்று மக்கள வையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக் குழுத் தலை வர் பி.ஆர். நடராஜன் கேள்வி எழுப்பி னார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது, பி.ஆர். நட ராஜன், நாட்டில் நீதிமன்ற நடவ டிக்கைகளில் பிராந்திய மொழி களை உபயோகப்படுத்தும் உயர்நீதி  மன்றங்களின் விவரங்கள் மாநில  வாரியாக எவையெவை என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த, ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச் சர் கிரண் ரிட்ஜூ அளித்த பதில் வரு மாறு: “இந்திய அரசமைப்புச் சட்டம் 348 (1) (a)-ஆவது பிரிவின் ஒவ் வொரு உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச  நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்  தும் ஆங்கில மொழியில் இருக்க  வேண்டும். இருப்பினும் (1) (a) துணைப்பிரிவின் படி, ஏதேனும்  மாநில அலுவலக தேவைகளின் பொருட்டு, அந்த மாநிலத்திலேயே முதன்மை இருக்கை கொண்டுள்ள உயர்நீதி மன்ற நடவடிக்கைகளுக்கு, குடியரசுத் தலைவரிடம் முன் அனு மதி பெற்று மாநில ஆளுநர், இந்தி  அல்லது பிற மொழிகளை உபயோ கிக்க அங்கீகரிக்கலாம். உயர்நீதிமன்றங்களில் நீதி மன்ற நடவடிக்கைகளுக்கு ஆங்கிலம் தவிர்த்த பிற மொழிகளை உபயோ கிப்படுத்துவது சம்பந்தமாக எந்த ஒரு முன்மொழிவின் மீதும் மாண்பு மிகு இந்திய உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதியிடம் அனுமதி பெற வேண்டு மென, 21-05-1965 தேதியிட்ட அமைச்ச ரவை குழுவின் முடிவில் குறிப்பிடப்  பட்டுள்ளது.

இந்தி மொழி

1950இல் இந்திய அரசமைப்புச் சட்டம் 348(2)ஆவது பிரிவின்கீழ், நீதி மன்ற நடவடிக்கைகளில் இந்தி  மொழியைப் பயன்படுத்த ராஜஸ்  தான் உயர்நீதி மன்றம் அங்கீகரிக்  கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள படி 21-05-1965 தேதியிட்ட அமைச்ச ரவை குழுவின் முடிவிற்கு பிறகு, இந்திய தலைமை நீதிபதியுடனான கலந்தாலோசனையுடன் உத்தரப்பிர தேச உயர்நீதிமன்றம் (1969), மத்தி யப் பிரதேச உயர்நீதிமன்றம் (1971) மற்றும் பீகார் உயர்நீதி மன்றம் (1972)  ஆகியவைகள் தங்களது உயர்நீதி  மன்ற நடவடிக்கைகளில் இந்தி  மொழியை பயன்படுத்த அங்கீக ரிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு, குஜராத், சட்டீஸ்கர், மேற்குவங்கம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநில அரசுகள் முறையே, தமிழ், குஜராத்தி, இந்தி, வங்கமொழி மற்றும் கன்னட மொழிகளை, தத்த மது உயர்நீதிமன்ற நடவடிக்கை களில் பயன்படுத்த அனுமதி அளிக்கு மாறு கோரிய முன்மொழிவுகளை இந்திய அரசு பெற்றுள்ளது. இந்த முன்மொழிவுகளின் மீது, இந்திய தலைமை நீதிபதி அவர்களிடம் அறி வுரை கோரப்பட்டு, முழுமையான உச்சநீதி மன்றமும் முறையான விவா தங்களுக்கு பிறகு, இந்த முன்மொழி வுகளை ஏற்றுக் கொள்வதில்லை என முடிவு செய்துவிட்டதாக தெரி விக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசிடமிருந்து பெறப் பட்ட மற்ற ஒரு வேண்டுகோளின் அடிப்படையில், இந்த முன்மொழிவு கள் சம்பந்தமாக, ஏற்கனவே எடுக்  கப்பட்ட முடிவினை மறு ஆய்வு செய்து உச்சநீதிமன்ற ஒப்புதலை தெரிவிக்குமாறு இந்திய தலைமை  நீதிபதியை ஒன்றிய அரசு வேண் டிக்கொண்டது. முழுமையான உச்சநீதிமன்றமும், விரிவான விவா தங்களுக்கு பிறகு, மேற்சொன்ன முன்மொழிவிற்கு ஒப்புதல் அளிப்ப தில்லை எனவும் மாண்புமிகு உச்சநீதி மன்றத்தால் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவினை மீண்டும் வலியுறுத்துவ தாகவும் இந்திய தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். முன்னாள் இந்திய தலைமை நீதிபதி, எஸ்.ஏ. போப்டே தலைமை யில் “பாரதிய பாஷா சமிதி” என்ற  அமைப்பை, இந்திய பார் கவுன்சில், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்ச கத்தின் ஆதரவின் கீழ் அமைத்துள்  ளது. சட்டரீதியான விவரங்களை மாநில மொழிகளில் மொழிபெயர்க் கும் நோக்கத்தின் பொருட்டு, அனைத்து இந்திய மொழிகளுக்கும் அணுக்கமான ஒரு பொதுவான அடிப்படையிலான சொல்வளத்தை உருவாக்கும் நடவடிக்கையை இந்த  அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் பதில ளித்துள்ளார்.           (ந.நி.)