tamilnadu

img

எலக்ட்ரிக்கல் தொழிலாளர் சங்க மாநில மாநாடு

சென்னை, அக். 1- தமிழ்நாடு எலக்ட்ரிக்கல் தொழிலாளர் சங்கத்தின் முதல் மாநில மாநாடு வருகிற நவம்பர் மாதம் 20ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. அதற்காக 50 பேர் கொண்ட வரவேற்புக் குழு  அமைக்கப்பட்டது. இந்த  கூட்டம் மாநில ஒருங்கிணைப் பாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் தலைமையில் அம்பத்தூரில் நடைபெற்றது. மாநாட்டின் இலட்சினையை சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.திருச் செல்வன் வெ ளியிட்டு பேசுகை யில், “நாட்டில் நிரந்தர தொழி லாளர்களின் எண்ணிக்கையை விட முறைசாரா தொழிலாளர் களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது” என்றார். சிஐடியு வடசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், “தமிழகத்தில் எலக்ட்ரிக்கல் தொழிலில் ஏறக்குறைய 11 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு  இவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. அனைவருக்கும் வேலை வழங்க வேண்டிய  ஒன்றிய அரசு, அனைத்து  பொதுத்துறை நிறுவனங் களையும் தனியாரிடம் தாரை வார்த்து நிரந்தர தொழிலா ளர்களையும் அத்துக் கூலிக ளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன” என்றார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.ரவிச் சந்திரன், ஓய்வு பெற்றோர் நல  அமைப்பின் மாநிலப் பொரு ளாளர் ஏ.பழனி, மத்திய சென்னை மாவட்டப் பொரு ளாளர் ராஜசேகர், சங்கத்தின் தென்சென்னை கிளைத் தலை வர் சந்திரசேகர், வடசென்னை மாவட்ட பொருளாளர் கே.நட ராஜன் ஆகியோரும் பேசினர். முன்னதாக அறிவரசு வரவேற்றார். புண்ணியகோட்டி நன்றி கூறினார். 50 பேர் கொண்ட வரவேற் புக்குக் குழுவின் தலைவராக எஸ்.கே.மகேந்திரன், செயலா ளராக எஸ். ெஜய்சங்கர், பொரு ளாளராக கிருஷ்ணமூர்த்தி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.