சென்னை, ஜன. 5- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில மாநாடு சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இம்மாநாட்டின் நிறைவில் அமைப்பின் சிறப்புத் தலைவராக எஸ்.கே.மகேந்திரன், தலைவராக த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளராக கே.சாமுவேல்ராஜ், பொருளாளராக இ.மோகனா, துணைப் பொதுச்செயலாளர்களாக கே.சுவாமிநாதன், பி.சுகந்தி, பி.செல்வன் உள்ளிட்ட 113 மாநிலக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.