கூடுதல் சட்டக் கல்லூரிகள் தொடங்கினால் தொழில் வாய்ப்பு பாதிக்கும்”
சட்டக் கல்லூரி அமைப்பது குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்ட கேள்வி களுக்கு, அமைச்சர் ரகுபதி பதிலளிக்கை யில், “தமிழ்நாட்டில் 15 அரசு சட்டக் கல்லூரிகள், 12 தனியார் சட்டக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களின்கீழ் 15 சட்டக் கல்லூரிகள், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சட்டப் பள்ளி, திருச்சியில் தேசிய சட்டப் பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு, புதுச் சேரி பார் கவுன்சிலில் 1.75 வழக்கறிஞர்கள் பதிவு செய்துள்ளனர். ஆண்டுதோறும் சுமார் 9,000 வழக்கறிஞர்கள் புதுப்பித்து வரு கின்றனர். இந்நிலையில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகரில் புதிதாக சட்டக் கல்லூரி அமைக்கப்பட்டு வருகிறது” என்றார். மேலும், வழக்கறிஞர்கள் எண்ணிக்கைக் கும், நீதிமன்றங்களில் பதிவாகும் வழக்கு களின் எண்ணிக்கைக்குமான இடைவெளி அதிகமாக உள்ளது. ஆண்டுதோறும் 9 ஆயிரம் பேர் புதிதாக பதிவு செய்து வரு கின்றனர். எனவே கூடுதலாக சட்டக் கல்லூரி களை தொடங்கி, வழக்கறிஞர்களாக பதிவு செய்யும் பட்சத்தில் தொழில் வாய்ப்பில் பாதகம் ஏற்படும். அதனால் புதிதாக சட்டக் கல்லூரிகள் தொடங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
காவல்துறை மீது திட்டமிட்டு பழி: அமைச்சர் கண்டனம்!
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “தமிழ்நாட்டில் பல்வேறு தொழிற்சாலைகள் வந்து மக்களின் வாழ்க்கை மேம்பட்டு வருகிறது. இதை யெல்லாம் கண்டு பொறாமை படும் அள விற்கு சட்டம்-ஒழுங்கு சீர்கேடு என மக்களி டையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி” என்றார். அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி, பர மக்குடியில் மிகப்பெரிய அளவில் கலவரங்கள் நடைபெற்றன. தற்போது அந்த நிலைமை இல்லை. குற்றச் சம்பவங்களில் ஈடுபடு வோரை உடனடியாக கைது செய்கிறோம். சிவகங்கையில் மருத்துவர் கடத்தப்பட்டார் என்ற பொய்யான தகவலை கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங் கள் குறைந்துள்ளது என்றார் அமைச்சர்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’
சென்னை: ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ், கடந்த 2 ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கை களை அளித்துஉள்ளார்கள். அவற்றை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு ஆய்வு செய்தது. அதன் மூலம், 2,437 கோரிக்கைகள் பரிந்துரைக்கப் பட்டன. இந்தக் கோரிக்கைகளில், 513 பணிகளை மேற்கொள்ள சாத்தியக் கூறுகள் இல்லை யென்று தெரிய வந்தது. எனவே அவற்றிற்கு மாற்றாக, வேறு கோரிக்கைகளை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மூலம், ஓராண்டுக்கு முன்பே சம்பந் தப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களு டன் வலியுறுத்தப்பட்டது. அதன்படி 91 தொகுதி களில் இருந்து மாற்றுக் கோரிக்கைகள் வந்து உள்ளன. அதில், 216 பணிகள் தற்போது நடை பெற்று வருகின்றன.
புதுமை முயற்சிகள் திட்டத்திற்கு ரூ.302 கோடி
சென்னை: தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுவின் மூலம் ‘வளமிகு வட்டாரங்கள் திட்டம்’ செயல்படுத் தப்பட்டு வருகிறது. இதன் மூலம் வளர்ச்சி விகிதத்தில் பின்தங்கியுள்ள 50 வட்டாரங்களின் மேம்பாட்டுக் காக, சென்ற ஆண்டு, 100 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டு, 762 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசுத் துறைகளில் புதுமையை வளர்ப்பதற்கும், நடைமுறை சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்கீழ், கடந்த நான்கு ஆண்டுகளில் 82 பணிகளுக்கு 302 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கைது
சென்னை, மார்ச் 28 - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் (TNGEA) நிர்வாகி கள் தங்களது கோரிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக, வெள்ளியன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முயன்ற போது கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து டிஎன்ஜிஇஏ பொதுச் செயலாளர் மு.சீனி வாசன் கூறுகையில், “மாவட்ட ஆட்சியர் சங்க பிரதிநிதி களை சந்திக்க மறுத்ததோடு, மாவட்ட காவல்துறை கண்கா ணிப்பாளரை அழைத்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.பாஸ்கரன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மாநில புலனாய்வுத் துறை அதிகாரிகள், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் இந்த சம்பவத்தைக் கண்டித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், கைது செய்யப்பட்ட அனைத்து நிர்வாகிகளும் விடுவிக்கப்பட்டனர். இந்த நடவடிக்கையைக் கண்டிக்கும் வகையில் ஏப்ரல் 2 (செவ்வாய்க்கிழமை) அன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த டிஎன்ஜிஇஏ முடிவு செய்துள்ளது” என்றார்.