சென்னை,ஜன.4- தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் புதன்கிழமை (ஜன.5) தொடங்குகிறது, சென்னை கலைவாணர் அரங்கில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் இந்தகூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துகிறார். அவரை சபை மரபுபடி பேரவைத் தலைவர் மு. அப்பாவு, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்று பேரவைக்குள் அழைத்து வருவார்கள். முதல் நிகழ்ச்சியாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். அதனைத் தொடர்ந்து ஆளுநர் தனது உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்தத் தொடங்குவார். இதில் அரசு மேற்கொண்டு வரும் திட்டங்கள் இடம் பெறும். பின்னர் அந்த உரையை பேரவைத் தலைவர் மு.அப்பாவு தமிழில் வாசிப்பார். அதன் பின்னர் நாட்டுப்பண் பாடப்படும். அதோடு அவை நிகழ்ச்சிகள் நிறைவு பெறும். மரபுப்படி ஆளுநர் எப்படி அழைத்து வரப்பட்டரோ, அதே அணி வகுப்பின் படி அவர் வழியனுப்பி வைக்கப்படு வார். சட்டசபையை விட்டு கவர்னர் வெளியே செல்லும்வரை அவை உறுப்பினர்கள் நிற்பார்கள். அலுவல் ஆய்வுக்குழு பின்னர், பேரவைத்தலைவர் அப்பாவுவின் அறையில் அவரது தலை மையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனி சாமி மற்றும் சட்டமன்ற கட்சியின் உறுப்பினர்கள் இதில் கலந்துகொள் வார்கள். கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்னென்ன அலு வல்களை மேற்கொள்வது என்பது பற்றி அதில் முடிவு செய்யப்படும். இந்த கூட்டத்தொடர் அனேகமாக 3 நாட்கள் நடைபெறும் என எதிர்பார்க் கப்படுகிறது.