சென்னையில் நடைபெற்ற ஏடிபி சேலஞ்சர் டூர்-100 சர்வதேச ஆண்கள் டென்னிஸ் போட்டிக்கான தமிழ்நாடு அரசின் நிதியுதவியாக ரூபாய் 1 கோடிக்கான காசோலையை தலைமைச் செயலகத்தில் வெள்ளியன்று (ஏப்.28) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் விஜய் அமிர்தராஜிடம் வழங்கினார். கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணையக உறுப்பினர் மேகநாத ரெட்டி மற்றும் டென்னிஸ் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.