போக்சோ வழக்குகளை விசாரிக்க 14 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள்
லியல் குற்ற வழக்குகளை (போக்சோ) விசாரிக்க சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, ஈரோடு உள்பட 14 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை(ஏப்.4) சட்டத்துறை, நீதி நிர்வாகம் , சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. பின்னர், அமைச்சர் பதிலளித்து பேசுகையில், நமது அரசியலமைப்பின் முதன்மை நோக்கங்களில் ஒன்று, அனைத்து குடிமக்களுக்கும் விரைவான நீதியை பெறுவதாகும். தமிழகத்தில் 1,338 நீதிமன்றங்கள் இயங்கி வரு கின்றன. கடந்த ஆண்டு புதிதாக 73 நீதிமன்றங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு 41 நீதி மன்றங்கள் தொடங்கப்பட்டன. எஞ்சிய நீதிமன்றங்களை தொடங்கு வதற்கான பணிகள் நடைபெற்று வரு கின்றன”என்றார். பின்னர் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்: கூடுதல் மாவட்ட நீதிமன்றம் திருநெல்வேலி மாவட்டம், வள்ளி யூரில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்கப்படும். நிலக்கோட்டை, திருபெரும்புதூரில் புதிதாக சார்பு நீதிமன்றம் ஏற்படுத்தப்படும். சென்னை ஆவடி, கடலூர் ஸ்ரீமுஷ்ணத்தில் மாவட்ட உரி மையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் அமைக்கப்படும். குழந்தைகளை பாலியல் குற்றங் களில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின் (போக்சோ சட்டம்) கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்காக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு, கள்ளக்குறிச்சி திருச்சி, திருப்பூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, நாமக்கல், திருவாரூர், இராமநாத புரம், நீலகிரி ஆகிய 14 மாவட்டங்களில் தலா ஒரு சிறப்பு நீதிமன்றம் வீதம் 14 சிறப்பு நீதிமன்றங்கள் 3 கட்டங்களாக அமைக்கப்படும். திருச்சியில் மாவட்ட நீதிபதி தலைமையில் ஒரு கூடுதல் குடும்ப நல நீதிமன்றம் தேவையான பணியிடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுடன் ஏற்படுத்தப்படும். சட்டக்கல்லூரிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சட்ட பாடப்புத்தகங்களும் தமிழில் மொழி பெயர்க்கப்படும். அரசு சட்டக்கல்லூரி களில் ரூ.1 கோடி செலவில் தலா ஒரு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை அமைக்கப் படும். மேலும், ரூ.1 கோடி மதிப்பீட்டில் மின்- நூலகம் நிறுவப்படும். திருச்சி தேசிய சட்டப் பல்கலைக் கழகத்திற்கு இந்த ஆண்டு ரூ.2.5 கோடி, அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.1 கோடியும் நிதி வழங்கப்படும். சிறைகளில் கூடுதல் வசதிகள் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையின் கட்டிடங்களுக்கான ஆண்டு பராமரிப்பு நிதி ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கூடுதல் வசதிகளுடன் மாவட்ட சிறைச் சாலை வளாகம் கட்டப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.