tamilnadu

img

காபி, தேயிலை, ரப்பர் வாரியங்களை சீர் செய்க!

உதகமண்டலம், ஜூன் 27- தோட்ட தொழிலாளர்களை பாது காக்கிற வகையில், கேரளாவைப் போல தோட்ட வாரியம் அமைத்திட வேண்டும் என சிஐடியு அகில இந்திய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தென் மண்டல மாநாடு வலியுறுத்தியுள்ளது.  நீலகிரி மாவட்டம் கூடலூரில் சிஐ டியு அகில இந்திய தோட்டத் தொழிலா ளர் சங்கத்தின் தென் மண்டல மாநாடு ஞாயிறு, திங்கள் ஆகிய இரண்டு தினங்கள் சங்கத்தின் நிர்வாகி எஸ்.ஜெயமோகன் தலைமையில் நடை பெற்றது. மாநாட்டு வரவேற்பு குழு  தலைவர் குஞ்சு முகமது வரவேற் றார். தோட்ட தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் சி.கே.உன்னி கிருஷ்ணன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாநாட்டு வேலை அறிக்கையை, கே.சி.கோபி குமார் முன்வைத்தார்.  இந்த அறிக்கை யின் மீது கேரளம், தமிழ்நாடு, கர்நாடக மாநில பிரதிநிதிகள் விவாதித்து அறிக்கையை இறுதிப்படுத்தினர். மாநாட்டில், கேரளத்திலிருந்து 53 பிரதிநிதிகளும், கர்நாடகாவில் 10, தமிழகத்திலிருந்து 20 பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இதில், தோட்டத் தொழிலாளர் களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும், தோட்டத் தொழிலாளர் சட்டத்தை நடை முறைப்படுத்தாத நிறுவனங்கள் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,

தமிழக அரசுக்கு சொந்த மான டான்டி நிறுவனத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி, தொழிலாளர் நிலுவை தொகையை வழங்க வேண்டும். தோட்ட பகுதியை விஸ்தரித்து வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். ரப்பர் இறக்குமதியை குறைத்து, உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்,  காபி தேயிலை, ரப்பர் வாரியங்களை சீர் செய்ய வேண்டும், காபி தோட்ட தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை கொடுக்கவேண் டும். கேரள மாநிலத்தில் உள்ளது  போன்று சிறு தோட்டத் தொழிலாளர் களை பாதுகாக்கின்ற வகையில் தோட்ட நலவாரியம் அமைக்கவேண்  டும். ஒன்றிய அரசு தொழிலாளர் நலச் சட்டத்தை நான்கு தொகுப்புகளாக சுறுக்கியதை திரும்பப் பெறவேண்டும். நிலம்,வீடு இல்லாத தொழிலாளர் களுக்கு வீடு நிலம் வழங்க வேண்டும், தோட்டக் குடியிருப்புகளை சீர் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டை வாழ்த்தி, கேரளா  தோட்டத் தொழிலாளர் நல வாரிய தலைவர் ஏ.எஸ்.ராஜன் உரையாற்றி னார். இதனைத்தொடர்ந்து, மாநாட்டில் 39 பேர் கொண்ட தென்  மண்டல ஒருங்கிணைப்புக்கு குழு  தேர்ந்தெடுக்கப்பட்டது. இக்குழு விற்கு பி.வி.சகதேவன் கன்வீனராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாட்டில் கே.சி.கோபிகுமார், எம்.ஆர்.சுரேஷ், பி.நடராஜன் உள்ளிட்ட 8 பேர் கமிட்டி உறுப்பினர்களாக தேர்வு செய்யப் பட்டனர். 

வாழ்வுரிமை மாநாடு

முன்னதாக, கூடலூரில் தமிழ்நாடு தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வுரி மை மாநாடு கே.சி.கோபிகுமார் தலைமையில் நடைபெற்றது இதில், தோட்ட சங்க சம்மேளனத்தின் அகில இந்திய தலைவர் சி.கே.உன்னி கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, சிஐடியு மாநில செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உரையாற்றினர்.  இம்மாநாட்டில், சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை பேசுகையில், தோட்டத் தொழிலாளர்களின் கோரிக் கைகளை சட்டமன்றத்தில் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக வும், தொடர் இயக்கங்கள் மூலமாக நமது உரிமைகளை வென்றெடுப் போம் என்றார்.  மாநாட்டில், தோட்ட சங்க நிர்வாகிகள் எம்.ஆர் சுரேஷ்,  எம். வல்சகுமார், பி.ரமேஷ்  சுந்தரம், சிஐடியு மாவட்ட செயலாளர் சி.வினோத் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.