புதுதில்லி, டிச.23- தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் பரவல் வேகம் குறைவதாகவும் ஒமைக்ரானால் மருத்துவ மனையில் அனுமதிக்கும் நிலையோ மரணமோ அதிகமாக ஏற்படவில்லை என்றும் தென்னாப் பிரிக்க தடுப்பூசி, தொற்று நோய்கள் துறையின் மூத்த ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். முதன்முதலாக தென் ஆப்பிரிக்க விஞ்ஞானி களால் கடந்த நவம்பர் 25 ஆம் தேதியன்று உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதுவரை ஒமைக்ரான் வைரஸ் 106 நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் பரவல் குறையத் தொடங்கி யிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத் துறை நிபுணர்கள் கூறுகையில், கடந்த நவம்பர் 26 ஆம் தேதி ஒமைக்ரான் முதன்முதலாகக் கண்டறியப் பட்டது. அதன்பிறகு கொரோனா தொற்று எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்தது.
இப்போது அது படிப்படியாகக் குறையத் தொடங்கி யுள்ளது. ஒமைக்ரான் அலை உச்சத்தைத் தொட்டு சரிவதாகக் கருதுகிறோம் என்று தெரிவித்துள்ள னர். தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் தொற்று உறுதியான முக்கிய பகுதியாக கருதப்பட்ட காடெங் மாகாணம், ஜோஹனஸ்பெர்க், ப்ரிடோரியா ஆகிய பகுதிகளில் அன்றாட பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. இது குறித்து தென் ஆப்பிரிக்காவின் விட்வாட்ஸ்ரேண்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி, தொற்று நோய்கள் ஆராய்ச்சித் துறை மூத்த ஆராய்ச்சியாளர் மார்டா நூன்ஸ் கூறுகை யில், கவ்டென் மாகாணத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது. இந்தப் பகுதிதான் சமீப காலமாக தொற்றின் மையப்புள்ளியாகஇருந்தது. இந்நிலையில் எண்ணிக்கை குறையத் தொடங்கி யுள்ளது. இது உண்மையில் ஒரு குறுகிய அலை. இதில் நல்ல செய்தி என்னவென்றால் ஒமைக்ரானால் மருத்துவமனையில் அனு மதிக்கும் நிலையோ மரணமோ அதிகமாக ஏற்பட வில்லை. தொற்று நோய்ப் பரவல் வரலாற்றில் எப்போது நோய்ப் பரவல் உச்சம் தொடுகிறதோ அதிலிருந்து அது மீண்டும் படுவேகத்தில் குறைவது இயல்பே” என்று தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்க தேசிய தொற்று நோய்கள் ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையில், “மற்ற உருமாறிய கொரோனா வைரஸ்களை ஒப்பிடும் போது ஒமைக்ரானால் மருத்துவமனையில் அனுமதியாகும் ஆபத்து 80 சதவீதம் குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.