மகளிர் டி-20 உலகக்கோப்பை யாருக்கு?
தென் ஆப்பிரிக்கா - நியூஸிலாந்து இன்று பலப்பரீட்சை
9ஆவது சீசன் மகளிர் டி-20 உலகக் கோப்பைத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸி லாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பி ரிக்கா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், 10 அணிகளும் 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. லீக் சுற்று முடிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன. முதல் அரையிறுதியில் 6 முறை சாம்பி யனான ஆஸ்திரேலியாவை தென் ஆப்பிரிக்கா வீழ்த்தி இறுதிக்கு முன்னே றியது. அதேபோல இரண்டாவது அரையிறுதியில் மேற்கு இந்தியத் தீவுகளை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூஸிலாந்து அணி. இந்நிலையில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் இதுவரை டி-20 உல கக்கோப்பையை வென்றதில்லை. இத னால் முதல் முறையாக டி-20 உலகக் கோப்பையைக் கையில் ஏந்தும் முனைப்பில் இரு அணிகளும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்ப தால் இறுதி ஆட்டம் மிகப் பரபரப் பாக நடைபெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இடம் : துபாய் மைதானம், ஐக்கிய அரபு அமீரகம்
நேரம் : இரவு 7:30 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஒடிடி)
பரிசுத்தொகை
K சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு - ரூ.19 கோடி
K இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு - ரூ. 9 கோடி
K அரையிறுதி தோல்வி - ரூ. 5 கோடி (தலா இரண்டு அணிகளுக்கு)
(இதுபோக குரூப் சுற்றில் வெளியேறிய அணிக
ளுக்கும் போதுமான அளவில் பரிசுத்தொகை உள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது)
பரபரப்பான கட்டத்தில் பெங்களூரு டெஸ்ட் நியூஸிலாந்து அணியின் வெற்றிக்கு 107 ரன்கள் நிர்ணயம்
3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது நியூஸிலாந்து கிரிக்கெட் அணி. இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் புதனன்று கர்நாடக தலைநகர் பெங்களூருவில் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, நியூஸி லாந்து அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளர்களான ஹென்றி (5 விக்கெட்டுகள்), வில்லியம் (4 விக்கெட்டுகள்) ஆகியோரின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் வெறும் 46 ரன்களுக்கு சுருண்டது. ரச்சின் ரவிந்திராவின் (134 ரன்கள்) அபார சதத்தின் உதவியால் நியூஸிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 402 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. 356 பின்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி சர்பிராஸ் கானின் (150 ரன்கள்) அபார சதம் மற்றும் ரிஷப் பண்ட் (99), விராட் கோலி (70) ஆகியோரின் அபார ஆட்டத்தால் 99.3 ஓவர்களில் 462 ரன்கள் குவித்து ஆட்டமிழந்து, நியூஸிலாந்து அணியின் வெற்றிக்கு 107 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து அணி 0.4 ஓவர்களில் ரன் கணக்கை துவக்காமல் இருந்தது. தொடர்ந்து ஞாயிறன்று 5ஆம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. ஒருநாள், 90 ஓவர்கள், 107 ரன்கள் இலக்கு, 10 விக்கெட் கைவசம் இருக்கும் என்ற சூழலில் பெங்க ளூரு டெஸ்ட் பரபரப்பாக நகர்ந்து வருகிறது. ஆட்டம் மழையால் பாதிக்கப்படாமல் இருந்தால் எந்த அணிக்கு வெற்றி என்று ஞாயி றன்று மதியத்திற்குள் தெரிந்து விடும். ஆனால் வெற்றி இலக்கு மிக குறைவாக இருப்பதால், நியூஸிலாந்து அணி வெற்றி பெற 10% கூடுதல் வாய்ப்புள்ளது.