tamilnadu

img

6ஆம் எண் சம்மனும் பெத்தேல் நகரின் கொந்தளிப்பும்! - செ.கவாஸ்கர்

சென்னை மாநகராட்சி 196வது வட்டத்திற்கு உட்பட்டது ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர். கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள இந்த பகுதி சோழிங்நல்லூர் தொகுதிக்குள் வரு கிறது. இங்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வசித்து வருகின்றனர். 4000 மேற்பட்ட குடியிருப்புகளில் 9500 வாக்காளர்களை உள்ளடக்கி 25ஆயிரம் மக்கள் வாழ்கின்றனர். 11 மின் மாற்றிகள், 150 தண்ணீர் தொட்டிகள், வழி பாட்டு தலங்கள், அம்மா உணவகம், தனியார் பள்ளிகள்  உள்ளன. 1998ம் ஆண்டு சர்வே எண் 282/1, 282/2, 282/3 ஆகிய நிலப்பகுதி ஈஞ்சம்பாக்கம் கிராம மக்க ளுக்கு பிரித்து வழங்கப்பட்டது. இந்த நிலங் களை கிராம மக்களிடமிருந்து தற்போதைய பெத் தேல்நகர் மக்கள் வாங்கி, குடியிருப்புகளை கட்டி வசித்து வருகின்றனர். இந்த மக்களில் பெரும் பாலானோர் ஆட்டோ ஓட்டுநர்கள், கட்டுமானம் உள்ளிட்ட முறைசாரா தொழிலாளர்களாக உள்ள னர். காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒருபகுதியாக இருந்த ஈஞ்சம்பாக்கம், 2011 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி இணைக்கப்பட்டு 196வது வட்டமாக மாற்றப்பட்டது. 

ஆக்கிரமிப்பு என சித்தரிப்பு

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி, பெத்தேல் நகர் மக்களுக்கு நிலவகை மாற்றம் செய்து இலவச பட்டா வழங்கிட 2010ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார். இப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட இருந்த இலவச வீட்டு மனைப் பட்டாவை தடுக்கும் நோக்கோடு நில புரோக்கர் ஐ.எச்.சேகர் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். பெத்தேல் நகர் பகுதியை ஆக்கிரமிப்பாக சித்த ரித்து காட்டிய அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளு படி செய்தது. அதேசமயம், குடியிருப்பு பகுதி யை ஆய்வு செய்யவும் உத்தரவிட்டது. இதன்பின்னர் 2013ஆம் ஆண்டு மீண்டும் ஐ.எச்.சேகர் தொடுத்த வழக்கை, 2015ஆம் ஆண்டு விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞா னம், வருவாய்த்துறை ‘ஏ’ ரிஜிஸ்டரில் திருத்தம் செய்யப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன் படி அந்தப் பகுதியை ஆய்வு செய்த காஞ்சி புரம் ஆட்சியர் கெஜலட்சுமி, ‘ஏ’ பதிவேடு திருத்தப் படவில்லை. மேய்க்கால், கைவேலியாக நிலம் உள்ளது என்று நீதிமன்றத்திற்கு தெளிவுபடுத்தி னார்.

வனத்துறையும் மேய்க்கால் புறம்போக்கு நிலம் என்று நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித் தது. பசுமைத் தீர்ப்பாயமும் பெத்தேல் நகர் சதுப்பு நிலம் இல்லை என்று தீர்ப்பளித்தது. இந்தப் பின்னணியில் 2017ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது, பெத்தேல் நகர் வீடுகள், கட்டிடங்கள் என திட்டமிட்ட பகுதி யாக மாறிவிட்டது. ஆகவே, அந்தப்பகுதியை அகற்ற முடியாது. ஒரு குடும்பத்திற்கு 2 சென்ட்  நிலம் இலவசமாகவும், அதற்கு மேல் வைத்துள்ள நிலத்திற்கு சதுர அடி 500 முதல் 2ஆயிரம் ரூபாய் விலையில் பட்டா வழங்கலாம் என ஆட்சி யர் அறிக்கை தாக்கல் செய்தார்.

அதிமுக அரசின் அலட்சியம்

இந்த காலக்கட்டத்தில் வழக்கை முடித்து  வைத்த நீதிபதிகள் குலுவாலி ரமேஷ், வேணு கோபால் அமர்வு, ஐஐடி பேராசிரியர்களை கொண்டு வனத்துறை அறிக்கையின் அடிப்படை யில் நிலத்தின் தன்மை, கட்டிடங்கள் கட்டப்பட்ட காலம் உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்ய வேண்டும். அந்த அறிக்கை மீது ஓராண்டிற்குள் முறைப்படுத்துதல் அல்லது அகற்ற அரசு முடி வெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. இதன்பேரில் அன்றைய அதிமுக அரசு 2018ஆம் ஆண்டு வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை; பட்டா வழங்கவும் ஆய்வு செய்ய வில்லை. இந்நிலையில் 2018ஆம் ஆண்டு பெத்தேல் நகர் தொடர்பாக மீண்டும் ஐ.எச்.சேகர்  தாக்கல் செய்த வழக்கை, நீதிபதி வேணு கோபால் தள்ளுபடி செய்தார். இதற்கு பின்னர், 2015ஆம் ஆண்டு (நீதிபதி சிவஞானம் வழங்கிய) வழங்கப்பட்ட தீர்ப்பை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை என்று கூறி மீண்டும் ஐ.எச்.சேகர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அதை நீதிபதி சிவஞானம் ஏற்றுக்கொண்டு, சென்னை மாவட்ட ஆட்சியர், வனத்துறை ஆகியவற்றின் அறிக்கை, பசுமைதீர்ப்பாயத்தின் உத்தரவு போன்றவற்றை கருத்தில் கொள் ளாமல் அதிகாரிகளு க்கு அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்தார்.

இதனைக் கண்டித்து 2019 ஆண்டு உழவர் திருநாளை பெத்தேல்  நகர் மக்கள் ‘கருப்பு பொங்கலாக’  கொண்டாடினர். 2020ஆம் ஆண்டு பெரும் உண்ணாநிலைப் போராட்டத் தை நடத்தினர். இந்தப் போராட்ட த்தில் பங்கேற்ற தற்போதைய மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “திமுக ஆட்சிக்கு வந்தால் பெத்தேல் நகர் பாதுகாக்கப்படும்” என்றார். சட்ட மன்றத் தேர்தலின்போதும் இந்த வாக்கு றுதியை அவர் அளித்தார். அதன்படி நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யாமல் உள்ளது. குடியுரிமைக்காக பெத்தேல் நகர மக்கள் களப்போராட்டம் நடத்துவ தோடு, பெத்தேல் நகர் பாதுகாப்பு பேர வை நீதிமன்றத்திலும் வழக்கை நடத்தி வருகிறது. 2018ஆம் ஆண்டு தொடுக்கப் பட்ட அந்த வழக்கை 13.9.2021 அன்று  விசாரித்த நீதிபதி சிவஞானம், மூன்று வார காலத்திற்குள் பெத்தேல் நகர் குறித்து தமிழக அரசு கொள்கை எடுத்து, அதை தெரிவிக்கும்படி அறிவுறுத்தி னார். நீதிமன்ற நடவடிக்கைகளை தொட ர்ந்து பெத்தேல் நகர் மக்களுக்கு விளக்கம் கேட்டு வருவாய்த் துறையின்  7ம் எண் சம்மன் (நோட்டீஸ்) வழங்கப் பட்டது. இதனால் மக்கள் பெரும் அச்சத் திற்கு ஆளாகியுள்ளனர்.

கே.பாலகிருஷ்ணன் முறையீடு

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் அந்தப் பகுதி களை பார்வையிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 30.9.2021 அன்று கடிதம் எழுதினார். அதில், “பெத்தேல் நகர் பகுதி சதுப்பு நிலம் இல்லை என்பதை பசுமை தீர்ப்பாயம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. சிவில் லீகல்  ஆக்ட் (சிஎல்ஏ) படி, நில நிர்வாக ஆணை யம், பெத்தேல் நகர் பகுதியை நத்த மாக வகை மாற்றம் செய்து குடி யிருக்கும் மக்களுக்கு இலவச பட்டா வழங்கிட மதிப்பீட்டுக் குழுவும் அறி வுறுத்தியுள்ளது. பெத்தேல் நகர் பகுதி மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கிட முன்னாள்  முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டபடி தற்போதைய முதல்வர் பட்டா  வழங்க வேண்டும். உயர்நீதிமன்றத்தில் உள்ள பெத்தேல் நகர் தொடர்பான வழக்கை முடித்து வைத்திட நட வடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தி இருந்தார்.

மற்றொருபுறம், வருவாய்த்துறை வழங்கிய 7ம் எண் சம்மனை எதிர்த்து பெத்தேல் நகர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. பெத்தேல் நகர் தொடர்பாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் இணைத்து தற்போதைய உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, ஆதிகேசவன் அமர்வு ஜன.20ந் தேதி விசாரிக்க உள்ளது. இந்த விசாரணையின்போது நில நிர்வாக ஆணையர், வருவாய்த்துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட் டோர் ஆஜராக வேண்டும். அனைத்து தரப்பினரும் விசாரிக்கப்படுவார்கள் என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள் ளது.

மக்கள் கொதிப்பு

இத்தகைய சூழலில் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது, 3 நாட்களுக்குள் குடியிருப்புகளை காலி செய்ய உத்தரவிட்டு (படிவம் 6)  வருவாய்த்துறையினர் சம்மன் கொடுக்க திங்களன்று (ஜன.10) பெத் தேல் நகருக்கு வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பிரதான  சாலையில் பந்தல் போட்டு போராட்டத் தை தொடங்கினர். இதனையடுத்து காவல்துறை மற்றும் வருவாய்த்துறையின், பெத்தேல் நகர் பாதுகாப்பு பேரவை நிர்வாகிகள் சு.க.விடுதலைச்செழியன், ப.நாராயணன் உள்ளிட்டோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனிடையே வேறு வழியாக சென்று வீடுவீடாக அதிகாரிகள் சம்மனை ஒட்டினர். இதன் காரணமாக எதிர்ப்பு போராட்டம் காத்திருப்பு போராட்டமாக மாறியது. போராட்ட பந்த லிலேயே கஞ்சி காய்ச்சி மக்கள் குடித்த னர். இந்தப் போராட்டத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் பேசினார்.

இந்நிலையில், சட்டமன்ற உறுப்பி னர் அரவிந்த் ரமேஷ் மக்களிடையே பேசுகையில், “நீதிமன்றத்தில் ஜன. 20ந் தேதி நடைபெற உள்ள விசாரணை யில் அதிகாரிகள் ஆஜராக வேண்டி  உள்ளது. எனவே, சம்மன் கொடுக்கின்ற னர். இருப்பினும், 20ந் தேதிக்குள் முத லமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பட்டா வழங்கப்படும்” என்றார். இதனை போராட்டக் குழுவும், மக்க ளும் ஏற்கவில்லை. இதனையடுத்து இரவும் போராட்டம் நீடித்தது. இந்தப் பிரச்சனையில் முத லமைச்சர் தலையிட்டு, பெத்தேல் நகர் மக்களுக்கு பட்டா வழங்க கொள்கை முடிவெடுத்து நீதிமன்றத்தில் அறிக்கை  தாக்கல் செய்ய வேண்டும். வருவாய்த் துறை அமைச்சர் வாயிலாக பட்டா  வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளி யிட வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்று பாதுகாப்பு பேரவை யினர் தெரிவித்தனர்.

“பெத்தேல் நகரை அங்கீகரிக்கப் பட்ட குடியிருப்பு பகுதியாக இருப்ப தால் சாலை, தெருவிளக்கு, குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு, மழைநீர் வடிகால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ள அரசு பட்டா வழங்க மறுப்பது ஏன்? பெத்தேல் நகருக்கு அருகாமையில் பன்னாட்டு பள்ளி ஒன்று செயல்படுகிறது. பக்கிங்காம் கால்வாயையொட்டி சர்வே எண் 283, 284ல்  தொல்லியல் துறைக்கு அரசு 10 ஏக்கர் நிலம் ஒதுக்கி  இருக்கிறது. அது எப்படி சாத்திய மானது? அக்கரைக்கு அருகில் கால்வாயையொட்டி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறதே அது எப்படி? ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோவில் இயங்கி வரு வதை அதை எந்த சட்டம் அனுமதிக் கிறது” என அடுக்கடுக்கான கேள்வி யை போராட்டத்தில் உள்ளவர்கள் எழுப்புகின்றனர்.

ஒன்றுபட்ட குடியிருப்பு வாசிகள்

6 ஆம் எண் சம்மன் வழங்குவதை எதிர்த்து தொடங்கிய போராட்டம் காத்திருப்பு போராட்டமாக மாறியுள்ள நிலையில், இரவு போராட்டத்தில் குழந்தைகளோடு தாய்மார்களும் கலந்து கொண்டுள்ளனர். சாலை யிலேயே சமைத்து, அங்கேயே உண்டு போராட்டத்தை தொடர்ந்தனர். கட்சி பாகுபாடுகளை விடுத்து குடி யிருப்புவாசிகள் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து போராடுகின்றனர். காஷ்மீர் பணியில் உள்ள ராணுவ வீரர் 5ஆயிரம் ரூபாய் நன்கொடை தரு வதும், மெடிக்கல்ஷாப் கடைக்காரர் 10 குட்னைட் கொடுப்பதும், ஆட்டோ தொழிலாளி 500 ரூபாய் கொண்டு வந்து நன்கொடையாக தருவதும் போராட்டத்திற்கு மேலும் ஆதரவையும் வலுவையும் சேர்த்துள்ளது.  . இந்த போராட்டம் இரண்டாவது நாளாக செவ்வாயன்றும் (ஜன.11) தொட ர்ந்தது. இதனையடுத்து காவல்துறை துணை ஆணையர், உதவி ஆணை யர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் போராட்டத்தை கைவிட்டு பேச்சு நடத்த வருமாறு அழைத்தனர். அதனை போராட்டக் குழு நிராகரித்து விட்டது.

ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி

இந்நிலையில் இந்தப்போராட் டத்தை ஆதரித்து கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் பேசுகையில், நீதிமன்றத் தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது வருவாய்த்துறை சம்மன் கொடுப்பது சட்ட விரோதமானது. இதன் படி வட்டாட்சியர் மீது குற்றவியல் (கிரி மினல்) நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ள நிலையில், வட்டாட்சியர் சம்மன் கொடுப் பதன் உள்நோக்கம் என்ன? பெத்தேல் நகர் பகுதியை மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் பார்வையிட்டு முதலமைச் சருக்கு கடிதம் எழுதியுள்ளார். பெத்தேல் நகர் மக்கள் ஆக்கிரமிப்பாளர்களோ, சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அல்ல. எனவே, முதலமைச்சர் கருணா நிதியை போன்று பெத்தேல் நகர் மக்க ளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டா வழங்க உத்தரவிட வேண்டும். இந்த பகுதி மக்களுக்கு மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் வாக்குறுதி அளித்தபடி, பட்டா வழங்க வேண்டும். கொரோனா பரவலை தடுக்க தனிமனித இடைவெளி கடைப்பிடிக்க வேண்டுமென்று அமைச்சர் அறிவுறுத்தி வருகிறார். படிவம்-6ஐ திரும்ப பெற நடவடிக்கை எடுத்தால் மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்வார்கள். மக்களுக்கு பட்டா கிடைக்கும் வரை மார்க்சிஸ்ட் கட்சி துணை நிற்கும்” என்று பேசினார். இந்தப் போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.வனஜகுமாரி, எஸ்.குமார், சுந்தர், பகுதிச் செயலாளர் ஜெயவேல், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ், தீ.சந்துரு உள்ளிட்டோர் பேசினர்.