‘போதை இல்லா தமிழ்நாடு’ என்ற முழக்கத்தை முன்வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஒரு கோடி கையெழுத்துக்கள் பெறும் பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகிறது. இதில் கவிப்பேரரசு வைரமுத்து கையெழுத்திட்டார். சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக், மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு ஆகியோர் உடனிருந்தனர்.