tamilnadu

img

பட்டியலின மக்களுக்கு பொதுச்சொத்துக்களில் பங்கு கோரி கையெழுத்து இயக்கம்

கோயம்புத்தூரில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், முதல் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். பொதுச் சொத்துக்களில் பட்டியலின மக்கள் அவர்களுக்குரிய பங்கினைப் பெற சட்டம் இயற்ற வேண்டும்; அவர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் அவர்களிடமே இருப்பதை உறுதி செய்ய வேண்டும்; கல்வி நிலையங்களில் சாதிய ஒடுக்குமுறையைத் தடுக்க வேண்டும்; தனியார் துறையில் இடஒதுக்கீட்டை கட்டாயமாக்க வேண்டும்; கழிவுகளை கையால் அகற்றும் நடைமுறையை தடை செய்ய வேண்டும்; சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த கையெழுத்து இயக்கம் துவங்கியுள்ளது. சிபிஐ மாநிலப் பொருளாளர் கே. ஆறுமுகம், தபெதிக பொதுச் செயலாளர்  கு. ராமகிருஷ்ணன், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் இரா. அதியமான், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் துணைத் தலைவர் யூ.கே. சிவஞானம், மாவட்டச் செயலாளர் இரா. ஆறுச்சாமி, திராவிடத் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி, புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பாளர் மலரவன், தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதைக் கழகத் தலைவர் நேருதாஸ் மற்றும் இனியவன் (சிபிஐஎம்எல் -ஸ்டார்) திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணை பொதுச்செயலாளர் காசு நாகராஜ்,  அறிவாயுதம் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.