மயிலாடுதுறை, ஏப்.12- மயிலாடுதுறை ராஜன் தோட்டம் சாய் விளையாட்டு பயிற்சி மையத்தில் இயங்கி வரும் தமிழகத்திலுள்ள தேசிய அள விலான பெண்களுக்கான கூடைப்பந்து மற்றும் கைப்பந்து பயிற்சி மையத்தை உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கு மாற்றும் ஒன்றிய அரசின் முடிவை கைவிட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஐயப்பன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அறிவழகன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் அமுல் காஸ்ட்ரோ மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்ட னர்.