tamilnadu

img

கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில்  சிறுகதைப் பயிலரங்கு

கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில்  சிறுகதைப் பயிலரங்கு

புதுக்கோட்டை, ஜுன் 15-  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில், புதுக்கோட்டையில் சிறுகதைப் பயிலரங்கு கடந்த சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற்றது.  தொடக்க நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கே. கங்கா தலைமை வகித்தார். மாநிலப் பொதுச்செயலர் த. அறம் தொடக்கவுரையாற்றினார். பொருளாளர் ப.பா. ரமணி, மாநில செயற்குழு உறுப்பினர் கோ.கலியமூர்த்தி, முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனத்தின் தேசியச் செயலாளர் டி.எஸ். நடராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  ‘சிறுகதை உருவாக்கம்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் சு. வேணுகோபால், ‘காலம், நிலம்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் எம்.எம். தீன், ‘தென்னிந்தியச் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் எஸ். செந்தில்குமார், “இளவரைவியல் கூறுகள்” என்ற தலைப்பில் பேரா.இரா.காமராசு, “பெண்பாத்திரப் படைப்புகள்” என்ற தலைப்பில் அகிலா கிருஷ்ணமூர்த்தி, “அழகியல்” என்ற தலைப்பில் கண்மணி ராசா ஆகியோர் பேசினர். முன்னதாக, புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் எழுத்தாளர் அண்டனூர் சுரா நோக்கவுரை நிகழ்த்தினார். புதுகை பிலிம் சொசைட்டி தலைவர் எஸ்.இளங்கோ ஏற்பாட்டில் குறும்படங்கள் திரையிடப்பட்டன.  மாநிலம் முழுவதும் இருந்தும் சிறுகதை எழுத்தாளர்கள் இந்தப் பயிலரங்கில் பங்கேற்றனர்.