tamilnadu

img

சங்கரய்யா முழங்குகிறார்

  1. மாவீரன் பகத்சிங்கை தூக்கில் ஏற்றிய அந்த கொடிய நிகழ்வுக்கு எதிராக உணர்ச்சிப் பிழம்பாக எழுந்த கோபாவேச அலை தமிழகத்தில் சுதந்திரப் போராட்டத்தின் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. பகத்சிங்கிற்காக அவரது தோழர்களுக்காக தமிழக மக்கள் ஆவேசத்தோடு கிளர்ந்தெழுந்தார்கள். அவர்களது துயர முடிவுக்காக கண்ணீர் வடித்தார்கள். தூத்துக்குடியில் அந்த பேரணியில் பங்கேற்றபோது எனக்கு ஒன்பது வயது.
  2. 1941 பிப்ரவரி 28 அன்று பிரிட்டிஷ் அரசு என்னை கைது செய்தது. கல்லூரி இறுதியாண்டு தேர்வு நடப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்தது. அதற்கு பிறகு நான் கல்லூரிக்கு திரும்ப முடியவில்லை. எனது பி.ஏ., படிப்பை முடிக்கவே முடியவில்லை.1941 பிப்ரவரி 28 அன்று பிரிட்டிஷ் அரசு என்னை கைது செய்தது. கல்லூரி இறுதியாண்டு தேர்வு நடப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்தது. அதற்கு பிறகு நான் கல்லூரிக்கு திரும்ப முடியவில்லை. எனது பி.ஏ., படிப்பை முடிக்கவே முடியவில்லை.
  3. 1942 ஏப்ரல் வாக்கில் பிரிட்டிஷ் அரசு, சிறையிலிருந்த அனைத்து மாணவர்களையும் விடுதலை செய்தது - என்னைத் தவிர. தலைமை சிறை வார்டன் வந்து, சங்கரய்யா யார்; உன்னைத் தவிர அனைவரையும் விடுதலை செய்ய உத்தரவு என்று தெரிவித்தார். ஒரு மாத காலம் என்னை தனிமைச் சிறையில் அடைத்தார்கள். எட்டு பேர் இருந்த அந்த சிறை வளாகத்தில் நான் மட்டும் இருந்தேன்.
  4. 1946ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பி.சி.ஜோஷி மதுரைக்கு வருகை தந்தார். அப்போது ஒரு லட்சம் மக்கள் பங்கேற்ற மாபெரும் கூட்டம் நடத்தினோம். அதில் அவர் உரையாற்றினார். மதுரையில் இதுபோல பல பொதுக்கூட்டங்களில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் திரண்டு வந்தார்கள்.
  5. 1947 ஆகஸ்ட் 14 அன்று தான் மத்திய சிறைச்சாலைக்கு வந்து நீதிபதி எங்களை விடுதலை செய்வதற்கான உத்தரவினை பிறப்பித்தார். மதுரை சதி வழக்கிலிருந்து நாங்கள் விடுவிக்கப்பட்டோம். நான் மதுரை மத்திய சிறைச்சாலையிலிருந்து வெளியில் வந்து அப்படியே சுதந்திரப் பேரணியில் கலந்து கொண்டேன்.
  6. தீண்டாமைக் கொடுமைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமானால், கிராமப்புற சமூக - பொருளாதார நிலையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அதற்கு தீவிர நிலச் சீர்திருத்தத்தை அமலாக்க வேண்டும்.
  7. தொழிலாளிகளையும், விவசாயிகளையும் அமைப்பு ரீதியாக சித்தாந்த ரீதியாகத் திரட்டினால் அது ஒரு மாபெரும் புயல் காற்றாகும்.
  8. உண்மையான தத்துவத்தின் பால் உள்ளத்தை பறிகொடுத்தவர்கள் மார்க்சிஸ்ட்டுகள். அவர்களால்தான் ஈடு இணையற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும்.
  9. நாட்டுக்குச் செய்த ஊழியம், அதுதான் மனதிருப்தி அளிப்பது. இப்போதும் நாட்டுக்கு ஊழியம் செய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும். சிரமங்களை ஏற்க முன் வரவேண்டும். எதையும் குறுக்கு வழியில் அடைந்துவிட முடியாது.
  10. தீண்டாமை கொடுமை எங்கு இருந்தாலும் அதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும்.
  11. கல்லாமை இருளைப் போக்கிட வேண்டும். இல்லாமையைப் போக்கிட வேண்டும். அறியாமையை அறவே ஒழித்திட வேண்டும். மனிதர்களுக்குள் உள்ள ஏற்றத்தாழ்வுகளைப் போக்கிட வேண்டும்.
  12. பொறியியல் உள்பட அனைத்தும் தமிழிலேயே கற்பிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் அவரவர் தாய்மொழியிலேயே கல்வி கற்றுத் தரப்பட வேண்டும்.
  13. எல்லோரையும் தோழர் என்று அழையுங்கள். தோழர் என்ற வார்த்தைக்கு சாதியில்லை, மதமில்லை, மொழியில்லை, இன வேறுபாடு இல்லை. பெரியவர், சிறியவர் அனைவரும் தோழர்கள்தான்.
  14. ஒரு சகோதரனின் கடமை என்னவென்றால் தன் சகோதரி விரும்பிய காதலனுக்கு திருமணம் செய்து வைப்பதுதான். ஆசைப்பட்டதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள். ஆனால் காதல் திருமணம் என்றதும், கலப்பு திருமணம் என்றதும் செய்து தர மறுக்கிறார்கள். இது தான் உங்கள் பாசமா?
  15. நான் கேட்கிறேன், ஆர்எஸ்எஸ் இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியதா? இந்து மகாசபை போராடியதா? மதுரையில் கூடிய இந்து மகாசபா கூட்டம் இந்த நாட்டிற்கு சுதந்திரம் வேண்டாம் என்று தீர்மானம் போட்டது. இந்த நாட்டின் சுதந்திரத்திற்கும் ஆர்எஸ்எஸ்காரர்களுக்கும் என்ன சம்பந்தம்?
  16. சோசலிசம் வென்றே தீரும். அதைவிட மனிதகுல மீட்சிக்கு வேறு வழியே கிடையாது.