தஞ்சாவூர், ஜன.6- தமிழ்நாடு வரு வாய்த்துறை முன் னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்த ரம் மனைவியும், பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் சொசைட்டியின் தலைவருமான சகுந்தலா அம்மை யார் (86) உடல்நலக்குறைவு காரண மாக வியாழனன்று அதிகாலை சென்னை யில் காலமானார். இவருக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அம்மா பேரவை இணைச் செயலாளர் எஸ்.டி.எஸ்.செல்வம், சென்னை துறைமுக தலை மைப் பொறியாளர் எஸ்.டி.எஸ்.துரை மாணிக்கம் ஆகிய மகன்கள் உள்ளனர். பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ஈக்காட்டுதாங்கல் இல்லத்தில் உடல் வைக்கப்பட்டிருந்தது. முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலம் வெள்ளியன்று மாலை 3:30 மணி அளவில், சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த செண்டங்காடு கிராமத்திலுள்ள அவர்களது இல்லத்தில் இருந்து புறப்படும் என பட்டுக்கோட்டை பாலி டெக்னிக் கல்லூரியின் செயலாளர் எஸ்.டி.எஸ்.செல்வம் தெரிவித்தார்.