மாவட்ட ஆட்சியருக்கு சிபிஎம் வேண்டுகோள்
திண்டுக்கல், ஜுன்5 மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரானா பரிசோதனை மையங்கள் அமைத்திட வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மனுக்கொடுக்கப்பட்டது . வெள்ளியன்று மாலை மாரக்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதா னந்தம், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் கே.ஆர்.கணேசன், நகரச் செய லாளர் பி.ஆசாத் ஆகியோர் நேரில் சந்தித்து மனுக்கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா தொற்று சென்னை யை சுற்றி சில மாவட்டங்களில் தீவிர மடைந்துள்ளது. இது 2020 ஜூன், ஜூலை மாதங்களில் உச்சத்திற்கு செல்லுமென கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நமது மாவட்டத்தில் அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளை மேற்கொள்ள வேண்டு கிறோம்.
திண்டுக்கல் மாவட்ட தலை மையக மருத்துவமனையில் கொரோ னா தொற்று நோயாளிகளாக உள்ள 17 பேருக்கும் சத்தான சரிவிகித உணவுகள், பழங்கள், ஆவிபிடித்தல், பரிந்துரைத்த மருந்துகள், கவுன்சிலிங் உள்ளிட்ட அனைத்தும் கிடைப்பதை உறுதிப்படுத்திட வேண்டும். திண்டுக்கல் மாவட் டத்தில் உள்ள 6 தாலுகா மருத்துவ மனைகள், 5 தாலுகா அல்லாத மருத்துவமனைகள், 10 ESI மருந்தகங்கள், 14 வட்டார மருத்துவ மனைகள், 1 கஸ்தூரிபாய் மருத்துவ மனை, 1 திண்டுக்கல் மாநகராட்சி மருத்துவமனை, 1 பழனி நகராட்சி மருத்துவமனை, 42 ஆரம்ப சுகா தார நிலையங்கள் ஆகியவற்றில் கொரோனா பரிசோதனை மைய ங்கள் உருவாக்கப்பட வேண்டும். முதல் கட்டமாக பொதுமக்களுடன் அதிக தொடர்புகள் கொள்ளக்கூடிய அரசு பணிகளில் இருப்போர் மற்றும் வியாபார நிறுவனங்களில் பணி புரிவோர் உள்ளிட்டோருக்கு கொரோ னா சோதனைகள் செய்யப்பட வேண்டும்.
இரண்டாவது கட்டமாக குடும்பத் தில் உள்ள 50 வயதிற்கு மேற்பட்டோ ருக்கு கொரோன சோதனைகள் செய்யப்பட வேண்டும். மூன்றா வது கட்டமாக நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபரின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், தொடர்பாளர்கள் ஆகியோ ருக்கு சோதனைகள் செய்யப்பட வேண்டும். கொரோனா சோதனை களுக்கு காப்பீட்டு திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள அனும தித்திட வேண்டும். இப்பணிகளில் தனியார் மருத்துவமனைகளில் பணி புரியும் செவிலியர்களையும், மருத்துவர்களையும் ஈடுபடுத்த வேண்டும்.செவிலியர் படிப்பு முடித்த வர்களை இப்பணிகளுக்கு தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். 30 படுக்கைகள் கொண்ட மருத்துவ மனைகளை கொரோனா நோயாளி கள் சிகிச்சை பெறும் வகையில் தயார் செய்திட வேண்டும். அதிகமான இளைஞர்களை ரத்த கொடையா ளர்களாக மாற்றிட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை நமது மாவட்டத்தில் நிறைவேற்றுவதற்கு தமிழக அரசிடம் உரிய நிதி உதவி மற்றும் அனுமதி பெற்று முன்மாதிரி மாவட்டமாக மாற்றிட தாங்கள் முயற்சி எடுத்திட வேண்டுகிறோம்.
மேலும் கடந்த 2020 ஜூன் 1ம் தேதி முதல் தமிழக அரசு மண்டலங்க ளாக பிரித்து பேருந்து இயக்குவதில் திண்டுக்கல், தேனி, மதுரை, விருது நகர், இராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று வர அரசு பேருந்து இயக்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து தொழில் ரீதியாக திருப்பூர் மற்றும் கரூருக்கு தினசரி தொழிலாளர்கள் சென்று வரும் நிலை உள்ளதால் நமது மண்டலத்தில் இருந்து திருப்பூர் மற்றும் கரூருக்கு அரசு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறோம். திண்டுக் கல் மாவட்டத்திற்குள் கொடைக் கானல் மேல்மலை வரை பேருந்தை இயக்க நடவடிக்கை எடுப்பதுடன், நகர பேருந்து வழி தடத்தில் குறைந்த பட்சம் ஒரு பேருந்தாவது உள் கிரா மங்கள் வரை இயக்குவதை உறு திப்படுத்திட வேண்டுகிறோம். நகர பேருந்து வசதி இல்லாத வழி தடத்தில் மாவட்ட எல்லை வரை பேருந்து களை இயக்குவது பொதுமக்களு க்கு உதவிகரமாக இருக்கும். மேலும், மதுரை - பழனி இருவழியாக பயணி கள் இரயிலை இயக்குவதற்கு தமிழக முதல் அமைச்சர் மூலமாக இரயில்வே அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்து இயக்கிட நடவ டிக்கை எடுத்திட வேண்டுகிறோம். இவ்வாறு ஆட்சியரிடம் அளித்த மனுவில் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் கேட்டுக்கொண்டுள்ளார்.
(நநி)