tamilnadu

செந்துறையில் முந்திரி தொழிற்சாலை அமைத்திடுக!

செந்துறையில் முந்திரி தொழிற்சாலை அமைத்திடுக!

இன்று சிபிஎம் இருசக்கர வாகனப் பிரச்சாரம்

அரியலூர், ஜூன் 18 - அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் தொழில்நுட்ப கல்லூரி - முந்திரி தொழிற்சாலை  அமைத்திடவும், செந்துறை  ரயில் நிலையத்தில் முக்கிய ரயில்கள் நின்று செல்ல கோரி யும் ஜூன் 19 அன்று வாகனப் பிரச்சாரம் நடைபெறவுள்ளது.  செந்துறை வட்டம் 30 ஊராட்சிகளைக் கொண்டுள்ளது. 2011 மக்கள்தொகை கணக்குப்படி 1,10,421 பேர் உள்ளனர். இப்பகுதியில் முந்திரி அதிகமாக விளையும். இப்பகுதியில் இரு தனியார் சிமெண்ட் ஆலைகள் உள்ளன. தோண்டப்பட்டு காலாவதியான சுண்ணாம்பு ரங்கங்களும் உள்ளன.  இங்குள்ள படித்த இளைஞர்கள் வேலை தேடி வெளி யூருக்கு அதிகமாகச் செல்கின்றனர். ஆனால் இங்கு இரு தனி யார் தொழிற்சாலை இருந்தும் எந்தவிதப் பலனும் இல்லை.  இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க தனி யார் சிமெண்ட் ஆலைகள் தயாராக இல்லை. அப்படியே வேலை  கிடைத்தாலும் ஒப்பந்த தொழிலாளியாக மட்டுமே இருப்பர்.  நிலம் கொடுத்த விவசாயக் குடும்பத்தினருக்கு வேலை காகி தத்தில்தான் உள்ளது. இரு தனியார் சிமெண்ட் ஆலையின் சிஎஸ்ஆர் நிதியை, செந்துறை வட்டாரத்தில் மொத்தமுள்ள 30  ஊராட்சிகளில் தலா 15 என பிரித்தால்கூட கிராமப் பகுதியில்  அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும், கிராமந்தோறும் மருத்துவ முகாமை நடத்திட முடியும். ஆனால் முதலாளித் துவம் மக்களுக்காக இல்லை; அதன் லாப வெறிக்கு மக்களை  பலி கொடுக்கும் என்ற நிலையில் செந்துறை வட்டாரம் உள்ளது.  அதேபோல உஞ்சினி உள்ளிட்ட கிராமப் பகுதியில் காலா வதியான சுண்ணாம்பு சுரங்கங்களை காடுகளாக மாற்றிட வேண்டும். செந்துறையில் முந்திரி தொழிற்சாலை அமைக்க  வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே உள்ளது. இங்கு ஒரு கல்லூரிகூட கிடையாது. ஏழை - எளிய மாண வர்கள் பலரும் உயர்கல்வி பெற அரியலூர், திருச்சி, விருத்தாச் சலம், கடலூர் பகுதிகளுக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே  செந்துறை பகுதியில் அரசு தொழில்நுட்ப கல்லூரி அமைத்திட  தமிழக அரசு முன்வர வேண்டும்.  செந்துறை ரயில் நிலையத்தில் முக்கிய ரயில்கள் நின்று  செல்ல வேண்டும் என பல ஆண்டுகளாக மக்கள் வைக்கும்  கோரிக்கையை நிறைவேற்றாத ஒன்றிய அரசை கண்டித்தும்,  செந்துறை வட்டார மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜூன் 19 (வியாழன்)  அன்று இருசக்கர வாகன பிரச்சாரத்தை செந்துறையில் துவங்கிட இருக்கிறது. இதில் கட்சியின் மாநிலத் தலைவர்கள் உரையாற்ற உள்ள னர்.  எனவே செந்துறை வட்டாரப் பகுதி மக்கள் அனைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இருசக்கர வாகன பிரச்சா ரத்திற்கு வந்து, ஆதரவு தரும்படி கட்சியின் மாவட்ட செயற்குழு  உறுப்பினர் மணிவேல் மற்றும் செந்துறை வட்டச் செயலாளர் கு.அர்ச்சுனன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.