சென்னை,ஜன.25- போட்டித் தேர்வர்களுக்காக, தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியின் சார்பில் தனி அலைவரிசை ஏற்படுத்து வதற்கான அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. பல்வேறு ஒன்றிய, மாநில அரசு வேலை வாய்ப்புகளுக்காக இந்திய குடிமைப் பணி தேர்வுகள் (UPSC), இந்திய பொறியியல் பணித் தேர்வுகள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் நடத்தும் தேர்வுகள் (TNPSC), மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதேபோல் வங்கிப் பணிகளுக்கான தேர்வுகள், ரயில்வே பணிகளுக்கு தேர்வுகள் உள்ளிட்ட தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. இந்தத் தேர்வுகளை எழுதுவதற்காக தயாராகி வரும் போட்டியாளர்களுக்கு உதவும் வகையில், தனி அலை வரிசை ஏற்படுத்தப்படும் என கல்வி தொலைக்காட்சி அறிவித்திருந் தது. இந்நிலையில், கல்வித் தொலைக் காட்சியில் புதிய அலைவரிசையை உரு வாக்க தமிழக அரசு அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது. புதிய அலைவரிசை யை ஏற்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடும் தமிழக அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளது.