சென்னை,ஜன.21- நோயற்ற வாழ்வுக்கு சுகா தாரமே அடிப்படை என்று உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறினார். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமை யில் தொடங்கப்பட்ட ‘ரீச்’என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத் தின் 25-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, ‘ஆரோக்கிய சமத்து வத்தை நோக்கி-இந்தியாவுக் கான ஒரு தொலைநோக்கு’ என்ற தலைப்பிலான சொற்பொழிவு நிகழ்ச்சி சென்னையில் நடை பெற்றது. இதில், உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியாசுவாமி நாதன், மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ரீச் நிர்வாக இயக்குநர் நளினி கிருஷ்ணன், ரம்யா அனந்தகிருஷ்ணன், ‘இந்து’ என்.ராம் மற்றும் மூத்த மருத்துவ அதிகாரிகள், காசநோ யில்இருந்து குணமடைந்த வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். விழாவில், ரீச் நிறுவனத்தின் 25-வது ஆண்டு இலச்சினையை (லோகோ) அமைச்சர் மா.சுப்பிர மணியன், சவுமியா சுவாமி நாதன் ஆகியோர் வெளியிட்ட னர். பின்னர் சவுமியா சுவாமிநாதன் பேசியதாவது:- 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் காசநோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று முயற்சித்து வருகிறோம். இதற்கு, காசநோய்க்கான காரணங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தியாவில் 90 விழுக்காட்டினர் பல்வேறு இணை நோய்களால் பாதிக்கப் பட்டுள்ளனர். சுகாதாரமான வீடு, உணவு உள்ளிட்டவை கிடைக்காவிட்டால், எத்தனை மருத்துவமனைகள் கட்டினா லும் போதாது. நோயற்ற வாழ் வுக்கு சுகாதாரம்தான் அடிப் படையானது என்பதை அனை வரும் உணர வேண்டும். அண்மையில், உலக சுகாதார அமைப்பும், ஐசிஎம் ஆரும் இணைந்து தேசிய அளவில் காசநோய் தொடர்பான ஆய்வைமேற்கொண்டன. ஏறத்தாழ ஒரு லட்சம் பேரைப் பரிசோதித்ததில், 300 பேருக்கு காசநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காசநோய் இறப்பு விகிதம் 6 விழுக்காடாக உள்ளது. சர்க்கரை நோய், காச நோய் பாதிப்புகளில், தேசிய அளவில் தமிழகம்தான் முன்னிலை வகிக்கிறது. இந்தியாவில் காசநோய்க்கான முக்கியக் காரணி ஊட்டச்சத்து குறைபாடுதான். பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகத்தினரிடம் ஊட்டச்சத்துக் குறைபாடு நிலவுகிறது. இது தான் காசநோய் அதிகரிக்கவும் முக்கியக் காரணமாக இருக்கி றது. அதிக அளவில் பரிசோதனை செய்ததால்தான் கொரோனா வைக் கட்டுப்படுத்த முடிந்தது. அதேபோல, காசநோய் பரி சோதனைகளையும் அதிகம் மேற்கொள்ள வேண்டும். மேலும், காசநோயை ஒழிக்க அனைவருக்கும் சுகாதாரக் கல்வி அவசியமாகும். இவ்வாறு அவர் பேசினார். அமைச்சர் மா.சுப்பிர மணியன் பேசும்போது, “தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டிற்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காசநோயைக் கண்டறியபுதிய திட்டங்களைச் செயல்படுத்தி யதால், 96,500 புதிய காசநோ யாளிகள் கண்டறியப்பட் டுள்ளனர். அனைவருக்கும் மருத்துவ சேவை கிடைப்பதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது” என்றார்.