மாநாட்டிற்கு நிதி அளித்த மூத்த தோழர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்ட கால ஆதரவாளரான கோவை எஸ்.எஸ்.குளம் கிழக்கு கமிட்டிக்குட்பட்ட ஆர்.ஜி.புதூரை சேர்ந்த தோழர் என்.துரைசாமி, மதுரையில் நடைபெறும் அகில இந்திய மாநாட்டிற்கு தனது பங்களிப்பாக ரூ.50 ஆயிரத்தை மூத்த தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனிடம் வழங்கினார். உடன் ஒன்றியச் செயலாளர் எஸ்.வெள்ளிங்கிரி, ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.ஈஸ்வரன், ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.