சென்னை, செப். 2- வரத்து அதிகரித்துள்ள தால் ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர் மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாக தக்காளி விலை கடும் உயர்வை சந்தித்தது. 1 கிலோ தக்காளி விலை 200 ரூபாய்க்கு வரை விற்கப்பட்டதால் ஏழை, நடுத்தர மக்கள் சமையலில் தக்காளியை தவிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. எனவே அதன் விலையும் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2 வாரங்களாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி கிலோ 25 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் தக்காளி 10 ரூபாய்க்கும் மொத்த விலையில் விற்பனை செய்யப்படு கிறது. நவீன் தக்காளி கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.