tamilnadu

img

சாதிவெறியை கடுமையாகச் சாடியவர் தமிழ்ஒளி!

சென்னை, அக். 21 - கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நிறைவு விழா சனிக்கிழமையன்று (அக்.19) சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் மாநிலக்குழு இந்நிகழ்வை நடத்தியது. ஆனந்த் ஒருங்கிணைப்பில் முரசு கலைக்குழுவின் பறையிசை நிகழ்வு, காஞ்சி பா.ராஜேஸ்வரி மற்றும் கவிஞர் தமிழ்ஒளி கலைக்குழுவினரின் பாடல்களோடு நிகழ்வு தொடங்கியது.

கண்காட்சிகள்

எழுத்தாளர் சிகரம் ச.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாநிலப் பொருளாளர் சைதை ஜெ.  கவிதைக் கண்காட்சியையும், துணைத் தலைவர் மயிலை பாலு புத்தகக் கண் காட்சியையும், மாநிலக்குழு உறுப்பினர் இ.சங்கரதாஸ் ஓவியக் கண்காட்சியையும் திறந்து வைத்தனர். கவிஞர் தமிழ்ஒளி யின் `மே தினமே வருக’ என்ற கவிதை யினை வடசென்னை மாவட்டத் தலைவர் தளவை ராசேந்திரன் உணர்ச்சிப்பிரவாக மாக வாசித்தார்.

நூல் வெளியீடு

தமுஎகச வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை மாவட்டக் குழுக்கள் முன்முயற்சியில் உருவான “வெல்ல முடியாத தத்துவம்”, “வீராயி” குறுங் காவியம் ஆகிய நூல்களை தமுஎகச-வின் மாநில துணைத் தலைவர் திரைக் கலைஞர் ரோகிணி வெளியிட, விழாவில் பங்கேற்றவர்கள் பெற்றுக் கொண்டனர்.

எளியவர்களுக்கான  வலுவான குரல்

அப்போது பேசிய ரோகிணி, “தொழி லாளி வர்க்கத்தின் உரிமைக்காக போராட வேண்டிய நம் கவனத்தை எதிராளிகள் வெவ்வேறு பிரச்சனைகளுக்கு திசை திருப்புகின்றனர். உழைப்பாளி மக்கள் குடியிருப்புக்காகவும், சங்கம் வைக்கும் உரிமைகளுக்காகவும் இப்போ தும் போராட வேண்டியுள்ளது. ஒவ்வொரு போராட்டத்திலும் வெற்றியை கைக் கொள்கின்றோம். எளியவர்களுக்காக வலுவான குரலை தொடர்ந்து  தொய் வின்றி எழுப்புவோம். அப்படி இருந்த வர்தான் கவிஞர் தமிழ்ஒளி. அதை பின் தொடர்வோம்” என்றார். கவிஞர் சுகிர்தராணி குறிப்பிடுகை யில், “100 ஆண்டுகளுக்கு முன்பே முற் போக்கான, புரட்சிகரமான கவிதையை எழுதி வாழ்ந்து இருக்கிறார் கவிஞர் தமிழ்ஒளி. கவிஞர் தமிழ்ஒளியின் படைப் புகள், சிந்தனைகளை உழைப்பாளி மக்க ளிடம் கொண்டு செல்வோம்”  என்றார்.

ஆவணப்படம் வெளியீடு

மாநிலக்குழு உறுப்பினர் பாரதி செல்வா எழுத்து, இயக்கத்தில் உருவான “இருட்கடலின் ஆழத்திருந்து வந்த முத்தே! – தமிழுக்கு ஒளி சேர்த்த தமிழ்ஒளி” என்ற ஆவணப்படத்தை,  திரைப்பட இயக்குநர் சீனுராமசாமி வெளியிட்டார்.  அதனை சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் அறக்கட்டளை தலைவர் பா.வீரமணி, அகில இந்திய ரிசர்வ் வங்கி அலுவலர்கள் சங்கத்தின் செயலாளர் வீ.ராமச்சந்திரன், திரைப்பட இயக்குநர் ஜெயக்குமார், பாட லாசிரியர் ஏகாதசி, தமுஎகச மாநில துணைச் செயலாளர் மருதுபாரதி, மாநில  செயற்குழு உறுப்பினர்கள் இரா.தெ. முத்து, க.மலர்விழி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

சீனுராமசாமி

அப்போது பேசிய இயக்குநர் சீனுராம சாமி, “எது கவிதை? என்று வரையறை செய்து கண்டுபிடிப்பதற்குள் பல கவிதை களையும், கவிஞர்களையும் விட்டு விடு கிறோம். தமிழ்ஒளியின் படைப்புகள் அனைத்தும் மக்களுக்கானதாக, சமூக அநீதிக்கு எதிரானதாகவே உள்ளது” என்றார். “ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொல்கத்தா நூலகத்தில் செல்லரித்த சில காகிதங்கள் கிடைத்தன. தொட்டால் கிழி ந்து போகும் அளவிற்கு இருந்தது. அதை கேமரா மூலம் படம் பிடித்தபோது பாரசீக மொழி கவிதை என தெரியவந்தது. அதை உருதுவுக்கு மாற்றி, ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது. அதுதான் உமர்கயாம் கவிதைகள். 600 வருடமாக ஒரு படைப்புக்கு உயிர் இருந்தது,  நல்ல படைப்பாக இருந்தால் அது எப்படியும் மக்களிடத்தில் வந்து சேரும் என்பதற்கு சான்றுதான் உமர்கயாம் கவிதை” என்றும் அவர் கூறினார். “கவிஞர் தமிழ்ஒளி தனது கவிதை களில் சாதியை, சாதிவெறியை பயங்கர மாக அன்றைய காலகட்டத்திலேயே சாடி யிருக்கிறார். தமிழ்நாடு அரசு அவருக்கு சிலை வைத்துள்ளது. கவிஞர்கள் கம்யூ னிஸ்ட்களைப் போல் கலாரசனை உள்ள வர்கள்தான். அதற்கு சான்றாக கவிஞர் தமிழ்ஒளியும் அவரது படைப்புக்களும் உள் ளன. ஒரு பொதுவுடைமை கவிஞரை தமிழ் சமூகத்திற்கு காட்டிய தமுஎகசவிற்கு நன்றி” என்றும் சீனுராமசாமி கூறினார். ‘பன்முகப் படைப்பாளி தமிழ்ஒளி’ என்ற தலைப்பில் ஆய்வாளர் ரேவதி பழ னிச்சாமியும், ‘தமிழ்ஒளி படைப்புகளில் சனாதன ஒழிப்பு’ என்ற பொருளில் பேரா சிரியர் ஜெயபாலனும் கருத்துரையாற்றி னர். நாடகவியலாளர் பிரளயன் நெறி யாள்கையில், சென்னை கலைக்குழு வின் தமிழ்ஒளியின் குறுங்காவியமான ‘வீராயி’ நாடகம் அரங்கேற்றம் செய்யப் பட்டது. இதனை தொடர்ந்து மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா நிறை வுரை ஆற்றினார். மாநில துணைச் செய லாளர்  கி.அன்பரசன் நன்றி கூறினார்.  முன்னதாக மாநிலக்குழு உறுப்பினர் பா. ஹேமாவதி வரவேற்றார். திரைக்கலை ஞர் எம்.மகேஷ்வரி, தி.ஐஸ்வரியா ஆகியோர் நிகழ்வை தொகுத்தளித்தனர். தொகுப்பு: முஜெ.