இராமநாதபுரம், ஏப்.18- இராமநாதபுரத்திற்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை யன்று மதச்சார்பற்ற கட்சிகள் கருப் புக்கொடி போராட்டம் நடத்தின. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறை வேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டு, அரசியலமைப்புச் சட்டத்தை மீறி ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவ தைக் கண்டித்தும் மாமேதை காரல் மார்க்ஸ் குறித்து அவதூறாகப் பேசி யதைக் கண்டித்தும் ஒன்றிய அரசு ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் இராமநாத புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட மதச் சார்பற்ற கட்சிகளின் சார்பாக கருப் புக்கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு ஏப்ரல் 18 செவ்வாயன்று நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சிபிஎம் தாலுகாச் செய லாளர் பி.செல்வராஜ் (சிபிஎம்), சிபிஐ மாவட்டச் செயலாளர் என்.எஸ்.பெருமாள், மதிமுக மாவட்ட நிர்வாகி சுரேஷ், விசிக மாவட்ட நிர்வாகி விடுதலை சேகரன் ஆகி யோர் தலைமை வகித்தனர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். சிவாஜி, வி. மயில்வாகனன், எம்.ராஜ்குமார் ,இ. கண்ணகி, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் என். வெங்கடேஷ், பி.கல் யாணசுந்தரம்,மதிமுக மாவட்டச் செயலாளர் பேட்ரிக், பரமக்குடி நகர் மன்ற துணைத் தலைவர் எம்.ஏ.எம். குணா உட்பட நூற்றுக்கும் மேற்பட் டோர் கைது செய்யப்பட்டனர்.